மின்னல் தாக்கி பெண் பலி
திருநெல்வேலி, ஏப்.3- நெல்லை அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார். நெல்லை அருகே உள்ள கங்கை கொண்டானை அடுத்த மேலக்கோட்டை கிராமம் மேல தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி வள்ளி தாய் (45). இவர் சனிக்கிழமை வழக் கம்போல் தனது ஆடுகளை மேய்க்க அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றார். மாலை அந்த பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது எதிர்பாராத விதமாக வள்ளிதாய் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கங்கை கொண்டான் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று வள்ளிதாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
குமரியில் கோடை மழை: மரம் எரிந்தது
நாகர்கோவில், ஏப்.3- கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாரம் திட்டுவிளை பகுதி யில் இடி மின்னலுடன் பெய்த கோடை மழையில் மரம் தீப்பற்றி எரிந்தது. கடந்த தினங்களில் வெயில் சுட்டெ ரித்து வந்த நிலையில் ஞாயிறு மாலை கன மழை பெய்தது. அந்நேரம் திடீ ரென அப்பகுதியில் இருந்த தென்னை மரம் ஒன்றில் இடி விழுந்து அம்மரம் எரிந் தது. மிக அருகாமையில் வீடேதும் இல்லா ததால் உயிர்சேதம் ஏற்படவில்லை.
நெல்லை, தென்காசியில் மின்வாரிய குறைதீர் கூட்டம்
திருநெல்வேலி, ஏப்.3- நெல்லை, தென்காசி மாவட்டங்க ளில் மின்வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டம் 5 ஆம் தேதி நடக்கிறது. நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: நெல்லை, தென்காசி மாவட்டங்க ளில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் மின் வாரிய குறைதீர்க்கும் கூட்டம் அறிவிக் கப்பட்டுள்ளது. இந்த கூட்டமானது காலை 11 மணிக்கு தொடங்குகிறது. அதன்படி 5 ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 8 ஆம் தேதி நெல்லை கோட்ட கிராமப்புற அலுவல கத்திலும், 12 ஆம் தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும், 19 ஆம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 22 ஆம் தேதி நெல்லை கோட்ட நகர்புற அலுவலகத்திலும், 26 ஆம் தேதி கல்லி டைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும், 29 ஆம் தேதி வள்ளியூர் கோட்ட அலு வலகத்திலும் நடைபெறுகிறது.
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
குழித்துறை, ஏப்.3- தமிழகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கும்பல்களை கருவறுக்கும் வித மாக தமிழகம் முழுவதும் கஞ்சா 2.0 வேட்டை மூலம் போலீசார் கூடுதல் தேடு தல் வேட்டை நடத்தி வரும் நிலையில் குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியில் செயல்பட்டு வரும் தனி யார் பள்ளி வளாகத்தின் அருகில் போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த பகுதியில் கேரள பதிவெண் கொண்ட ஒரு இருசக்கர வாகனம் மற்றும் ஒரு ஸ்கூட்டியில் மூன்று வாலிபர்கள் சந்தே கப்படும்படியான விதத்தில் நின்று பள்ளி மாணவர்களுக்கு ஏதோ பொட்டலங் களை ரகசியமாக வினியோகம் செய் துள்ளனர். இதனை கண்ட போலீசார் அந்த மூன்று வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்த போது அவர்களிடம் சுமார் 3 கிலோ மதிப் பிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அடைக்காகுழி பகுதி யைச் சேர்ந்த ஜெறின்,அருண் சிங் மற்றும் கேரளாவை சேர்ந்த முகம்மது நௌபில் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் 3 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
5 இளைஞர்கள் கைது
அறந்தாங்கி, ஏப்.3- அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷாபார்த்தீபனுக்கு வந்த ரகசிய தகவலின்படி, தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டபோது, திருநாளூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த விஜயன் (23) கஞ்சா விற்பனையில் ஈடு பட்டது தெரியவந்தது. இவருடன் விற்பனையில் தொடர்பு டையவர்களை கண்டறிய கடந்த 3 நாட்களாக போலீசார் தனிப்படை அமைத்து கோவை பிரகாஷ் (24), கோவை தினேஷ் பாபு (28), திண்டுக்கல் சரவணன் (25), கொடைக்கானல் சதீஷ் (32) ஆகிய வியாபாரிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 4 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கேரளாவிற்கு கடத்த முயன்ற சுமார் 1000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
களியக்காவிளை, ஏப்.3- தமிழக கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்து வதாக களியக்காவிளை போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது .இந்த நிலை யில் ஞாயிறன்று அதிகாலை களியக்கா விளை உதவி ஆய்வாளர் சிந்தாமணி தலை மையில் போலீசார் களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் லோடு ஆட்டோ ஒன்று வந்துக்கொண்டிருந்தது. ஆட்டோவை நிறுத்து மாறு சைகை காட்டி னர். அந்த ஆட்டோ நிறுத்தாமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று களியக்காவிளை சந்திப்பில் வைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் களியகாவிளை அருகே கொல்லக்குடி பகுதியை சார்ந்த விஷ்ணு (39) என்று தெரியவந்தது.மேலும் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்து பார்த்த போது சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந் தது.இதை தொடர்ந்து கடத்தல் ஆட்டோ வும் அரிசியும் உணவு தடுப்பு பிரிவு போலீ சாரிடம் ஒப்படைக்க பட்டது. அவர்கள் கடத் தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாகனத்தை வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்ப டைத்தனர்.
திருச்சி - சிதம்பரம் 4 வழிச்சாலை பணி கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் இழப்பீடு கோரி பொதுமக்கள் முற்றுகை
அரியலூர், ஏப்.3 - கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க கோரி நான்கு வழிச்சாலை பணி நடக்கும் இடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த சின்னவளையம் கிராமத்தில் திருச்சி - சிதம்பரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக, பொதுமக்களிடம் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க கோரி, நிலத்தை கொடுத்த விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஞாயிறன்று சாலை பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் சம்பவ இடத்திற்கு வந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் நிலம் கொடுத்தவர்களை, ஏப்.7 அன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு தொடர் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
திருச்சிராப்பள்ளி, ஏப்.3- திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பகுதி கோவண்டாகுறிச்சி கிராமம், வடு கப்பட்டி ஊராட்சி காமராஜபுரம் பகுதியில் சாலை விரிவாக்கத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். காமராஜபுரம் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டாக்களை உடனே கிராம வரைப்படத்தில் ஏற்றி மீதம் உள்ள வர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அங்கன்வாடிக்கு செல்ல மாற்றுப் பாதை ஏற்பாடு செய்து ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும். அங்கன் வாடிக்கு அருகில் உள்ள போரை சரி செய்து பைப்லைன் மற்றும் தெரு விளக்கு அமைக்க வேண்டும். கோவண்டாகுறிச்சி பஞ்சாயத்திலிருந்து 2500-க்கும் மேல் வாக்குகள் கொண்ட வடுகர்பேட்டையை தனி பஞ்சாயத்தாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புள்ளம்பாடி ஒன்றி யக் குழு சார்பில் வடுகர்பேட்டை ஊராட்சி மன்றம் எதிரில் தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமை யில் அமைதி பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், ஒன்றிய செய லாளர் ரஜினிகாந்த், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் குமார், வினோத்குமார், செஞ்சுடர், அரசு அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், பட்டாக்களை கிராம வரைப்படத்தில் ஒரு வாரத்தில் பதிவு செய்வது. அங்கன்வாடிக்கு மாற்றுப்பாதை அமைக்க தளப்பார்வை செய்து உரிய நடவடிக்கை எடுப்பது. காமராஜபுரம் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தனித்தனியாக நன்னீரும், உப்பு நீரும் இனிவரும் காலங்களில் ஏற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வருவது. சாலை விரிவாக்கத்தினால் பாதிக் கப்பட்ட பொதுமக்களுக்கு மாற்று இடம் அளிப்பதற்கு முன்னுரிமை பட்டியல் தயார் செய்து தகுதியான இடம் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் மேல் நடவடிக்கை எடுப்பது என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து தொடர் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
சிபிஎம் சாலை மறியல்
பொன்னமராவதி, ஏப்.3 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதியில் காவல் உதவி ஆய்வாள ராக பணிபுரிந்து வருபவர் ரகுராமன். பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு பதிவு செய்வது, மிரட்டுவது உள்ளிட்ட செயல் களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இவர், சனிக்கிழமை செவலூர் கிளை சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகி இளங்கோ கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், இளங்கோ மீதே வழக்குப்பதிவு செய்வேன் என மிரட்டியது, இளங்கோவுடன் வந்த சிபிம் ஒன்றிய செயலாளர் பக்ருதீன் உள்ளிட்ட நிர்வாகிகளை வெளியில் போகச் சொல்லி அராஜகத்துடன் நடந்து கொண்டுள்ளார். இதைக் கண்டித்து பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் தலை மையில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, குமார், சாத்தையா பாஸ்கர், நிர்வாகிகள் வெள்ளத்துரை, சுப்பிரமணி யன், திராவிடர் கழக நிர்வாகி ஆறு முகம், சிஐடியு நிர்வாகிகள், பாதிக்கப் பட்ட புகார்தாரர் இளங்கோ மற்றும் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறை யினர், கோரிக்கைகள் குறித்து மேலதிகா ரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக கூறியதை ஏற்று போராட்டத்தை தற் காலிகமாக கைவிட்டனர்.
ஏப்.13 காவல்துறை வாகனங்கள் ஏலம்
திருச்சிராப்பள்ளி, ஏப்.3- திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 3 இலகு ரக நான்கு சக்கர வாகனம் மற்றும் 13 இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. ஏப்ரல் 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் நடைபெறும். ஏலம் எடுக்க விரும்புவோர் ஏப்.5 ஆம் தேதி முதல் ஏப்.12 வரை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாக னங்களை பார்வையிடலாம். ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ஏப்.13 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆதார் அட்டை யுடன் நேரில் வந்து ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்த உடன் இருசக்கர வாகனத்துக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவீதமும், நான்கு சக்கர வாக னத்துக்கு 18 சதவீதமும் சேர்த்து செலுத்த வேண்டும் என மாநகர காவல் ஆணை யர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சித்தர் போல் வேடம் அணிந்து பணம் மோசடி
தம்பதி உள்பட 4 பேர் கைது
திருநெல்வேலி, ஏப்.3- உவரியில் சித்தர் போல் வேடம் அணிந்து பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் உவரி ராஜா தெரு வைச் சேர்ந்தவர் செல்வன் (42). இவருடைய மனைவி சகாயராணி. இவர் கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு திருச்சி காமராஜர் நகர் அறங்கூர் தொட்டியத்தைச் சேர்ந்த கலிய மூர்த்தி மனைவி சன்னியாசி அம்மாள் (45) என்பவர் திசையன்விளை பகுதிக்கு வந்தார். அவர் கைரேகை ஜோதிடம் பார்ப்பதாக சகாயராணியிடம் தெரிவித்தார். அவரிடம் சகாயராணி கால் வலி குறித்தும் தெரி வித்தார். இதற்கு திருப்பதியில் சித்தர் ஒரு வர் உள்ளார். அவர் வந்தால் உங்கள் கால் வலி சரியாகிவிடும் என்று சன்னியாசி அம் மாள் தெரிவித்தார். இதையடுத்து திருச்சி முல்லைநகர் தொட்டியம் அறங்கூர் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் தாமஸ் (30) என்பவர் சித்தர் போல் வேடம் அணிந்து செல்வன் வீட்டிக்கு வந்தார். அவரிடம் உங்கள் மனை வியை குணப்படுத்த ரூ.45 ஆயிரம் செலவா கும் என்று கூறினார். இதற்கு தன்னிடம் ரூ.22 ஆயிரம் மட்டுமே உள்ளது என்று தாமசிடம் கொடுத்தார்.
பின்னர் தாமஸ் குடிக்க தண் ணீர் கேட்டார்.செல்வன் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள், தாமஸ் அங்கு இருந்து தலைமறைவாகிவிட்டார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த செல்வன் இதுகுறித்து உவரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்க ரன் வழக்குப்பதிவு செய்து, சன்னியாசி அம்மாள், தாமஸ் ஆகியோரை கைது செய்த னர். இதேபோல் உவரி அருகே உள்ள காரி கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் லிங்க ராஜா (55) என்பவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் ஊரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த திருச்சி அறங்கூர் ராஜகம் பன் தெருவை சேர்ந்த படாரியப்பன் மனைவி நாகம்மாள் (35) என்பவர் ஜோதிடம் பார்ப்ப தாக கூறியுள்ளார். தொடர்ந்து நாகம்மாள் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். அவர் தண்ணீர் எடுக்க சென்றபோது நடக்க சிரமப்படுவதை பார்த்து எனக்கு கொல்லிமலை சித்தரை தெரியும். அவர் வந்து பார்த்தால் உங்க ளுக்கு குணமடையும் என்று நாகம்மாள் தெரிவித்தார். இதற்கு லிங்கராஜா சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து படாரியப்பன் கொல்லி மலை சித்தர் போல் வேடம் அணிந்து லிங்க ராஜா வீட்டிற்கு வந்தார். அவருடன் நாகம்மா ளும் வந்தார். அங்கு லிங்கராஜா காலில் படாரியப்பன் தைலம் தேய்த்தார். மேலும் காலை குணப்படுத்த ரூ.18 ஆயிரம் ஆகும் என்று தெரிவித்தார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று லிங்கராஜா கூறி னார். அந்த சமயம் படாரியப்பன் குடிக்க தண்ணீர் கேட்டதால், லிங்கராஜா தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது, கடையில் இருந்த ரூ.6 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு படாரியப்பன், நாகம்மாள் ஆகியோர் அங்கு இருந்து சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லிங்க ராஜா இதுகுறித்து உவரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, படாரியப்பன், நாகம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.
ரயில் முன்பதிவு பயணச்சீட்டுகளில் முறைகேடு செய்த 35 பேர் கைது
ரூ.4.42 லட்சம் மதிப்பில் பயணச்சீட்டுகள் பறிமுதல்
மதுரை, ஏப்.3- கொரோனா தொற்றுக்கு பிறகு அனைத்து விரைவு ரயில் களும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களுக் கான முன்பதிவு பயணச் சீட்டு கள் முழுவதும் விரைவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் இடைத்தரகர்கள் பய ணிகளுக்கு இயல்பாக கிடைக்க வேண்டிய முன்பதிவு பயணச் சீட்டுகளை அதிக அளவில் பதிவு செய்து முறைகேடு நடக்க வாய்ப் பிருக்கிறது. எனவே இதை தடுக்க மார்ச் மாதம் முழுவதும் மதுரை கோட்டத்தில் பல்வேறு தனியார் நடத்தும் பயணச் சீட்டு முன்பதிவு மையங்களில் ரயில்வே பாது காப்பு படை குற்றப்பிரிவு அலுவ லர்கள் அதிரடி சோதனை நடத்தி னர். மேலும் அங்கீகாரம் இல்லாத தனிநபர்கள் அதிக அளவில் பய ணச் சீட்டுகளை பதிவு செய்வதும் கண்காணிக்கப்பட்டது. இதில் 33 இடைத்தரகர்கள் 2 அங்கீகா ரம் பெற்ற முகவர்கள் முறைகேடு களில் ஈடுபடுவது கண்டுபிடிக் கப்பட்டது. அவர்களிடமிருந்து ரூ.4,41,686 மதிப்புள்ள 444 முன் பதிவு ரயில் பயணச் சீட்டுகள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. இந்த 444 பயணச்சீட்டுகளின் ரயில்வே முன்பதிவு ரத்து செய் யப்பட்டு முறையாக பெற வேண்டிய பயணிகள் பயன்பாட் டுக்கு வழிவகை செய்யப்பட்டுள் ளது. இந்த அதிரடி சோதனைகள் மதுரை கோட்ட ரயில்வே மேலா ளர் பத்மநாபன் அனந்த் ஆலோ சனையின் பேரில் ரயில்வே பாது காப்பு படை ஆணையர் வி.ஜே.பி.அன்பரசு, துணை ஆணையர் ஆர்.சுபாஷ் ஆகியோர் தலை மையில் நடைபெற்றது.