தோழர் ஏ.கே.கோ பாலன் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் நாள் பேரலாசேரி எனும் வடகேரள ஊரில் பிறந்தார். கல்வியை தெல்லி சேரி எனும் ஊரில் கற்றார். கற்கும் போது தான் ஒரு ஆசி ரியராக வரவேண்டும் எனவே விரும்பினார். 1927 ஆம் ஆண்டு இவர் தன்னை இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். கட்சியின் சார்பில் நடைபெற்ற கதர் இயக்கம் மற்றும் பட்டியலின முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றினார். உப்புச் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக 1930இல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 1937-இல் மலபார் பகுதியிலிருந்து சென்னைக்கு உண் ணாவிரத நடைபயணத்தைத் தொடங்கினார். இந்தியக் காப்பி விடுதியின் தொழிலாளர் போராட்டம் இவரது தலைமையில் நடந்தது. சுதந்திரத்திற்குப் பின் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் எதிர்க்கட்சித் தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின்சார்பில் பதவி வகித்த பெருமைக்குரியவர் தோழர் ஏ.கே.கோபாலன். நாடாளுமன்றத்தில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தோழர் ஏ.கே. கோபால னின் முழக்கம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. ஏ.கே. கோபாலன் எழுதிய ‘நான் என்றும் மக்கள் ஊழியனே’ எனும் சுயசரிதை நூல் கம்யூனிஸ்டுகள் படிக்க வேண்டிய முக்கிய நூல். 1964ல் கம்யூனிஸ்ட் கட்சியிலி ருந்து மார்க்சிஸ்ட் கட்சி உதயமான போது தம்மை கட்சியில் இணைத்துக் கொண்டு செயல்பட்டார்.
மார்ச் 22: ஏ.கே.கோபாலன் நினைவு நாள்