ஜூலை 24-இல் போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை!
சென்னை, ஜூலை 15- தொழிலாளர்களின் வேலை நிறுத்த நோட்டீஸ் தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகங் களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தி யாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன. இதுதொடர்பான 3-ஆம் கட்ட சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை. இதையடுத்து, ஜனவரி 9,10-ஆம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது, உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் 4 கட்டபேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலை யில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடர் பான அறிவிப்பை தொழிலாளர் தனி இணை ஆணையர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து 27 தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து நிர்வாகங் களுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “வேலைநிறுத்த அறிவிப்புகள் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார் த்தை ஜூலை 24-ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில், தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடைபெற வுள்ளது. இதில் கோரிக்கை மனுக்கள் அளித்த தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களும் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
சென்னை, ஜூலை 15 - மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி களில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானி லை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 16.07.2024 அன்று தமி ழகத்தில் ஒருசில இடங்களிலும், புது வை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீல கிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு 4,047 கனஅடி நீர்வரத்து!
மேட்டூர், ஜூலை 15 - காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரு கிறது. இதன் காரணமாக திங்களன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.76 அடியி லிருந்து 43.22 அடியாக உயர்ந்தது. அணை க்கு வரும்நீரின் அளவு வினாடிக்கு 4,013 கன அடியிலிருந்து 4,047 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 13.80 டிஎம்சியாக இருந்தது. அணையி லிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
வளசரவாக்கத்தில் ரூ.3 லட்சம் நூதன முறையில் கொள்ளை
சென்னை, ஜூலை 15- சென்னை வளசரவாக்கம் கைக்கான் குப்பம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பாரதி (38). இவர் தனியார் பள்ளி ஒன்றில் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். தற்போது சொந்த மாக வீடு கட்டிவரும் அவர், கட்டுமான பணிக்கு தேவையான பொருட்களை வாங்கு வதற்காக ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள யூனியன் வங்கியில் ரூபாய் மூன்று லட்சம் எடுத்துள்ளார். பின்னர் பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் முன்புறத்தில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து ஸ்கூட்டியில் வந்த நபர் ஒருவர் பாரதியிடம் '' 'கீழே 50 ரூபாய் கிடக்கிறது, அது உங்கள் பணம்தானா' என கேட்க, அதற்கு தன்னு டைய பணம் இல்லை என பாரதி மறுத்துள்ளார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து தனது வண்டியின் முன்பக்கத்தை கவனித்தபோது அதிலி ருந்து ரூபாய் மூன்று லட்சத்தை காண வில்லை என்பதை பாரதி உணர்ந்துள்ளார். அதிர்ந்துபோன அலக், உடனே இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படை யில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பணத்தை கொள்ளை அடித்த நபரை ஆந்திராவில் சென்று பிடித்தனர். விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் ஓ.ஜி குப்பத்தை சேர்ந்த ராஜசேகர் (32) என்பது தெரியவந்தது. ராஜ சேகரை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்த போலீசார், இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அவரது மூன்று கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
தக்காளி கிலோ ரூ.70 ஆக அதிகரிப்பு
சென்னை,ஜூலை 15- பரவலாக பெய்து வரும் மழை மற்றும் வடமாநிலங் களில் ஏற்பட்டுள்ள தட்டுப் பாடு காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. வெளிமாநில வியாபாரி கள் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் தக்காளியின் விலை கடந்த சில நாட்களா கவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மொத்த விற்பனை கடை களில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படுகிறது வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 வரை விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.
என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் உடல் தகனம்
சென்னை, ஜூலை 15- என்கவுண்டர் செய்யப் பட்ட தொழில்முறை ரவுடி யான திருவேங்கடத்தின் உடல் ஞாயிறன்று மாதவ ரம் நீதிபதி தீபா முன்னிலை யில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு திங்களன்று உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டது. தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ந் தேதி இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட் டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலை யில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர் புடைய முக்கிய குற்றவாளி யான ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித் தப் போது போலீசாரால் என்கவுண்டர் செய்யப் பட்டார். இந்நிலையில் அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் அப்பா கண்ணன், அக்கா முனியம்மாள் ஆகியோரிடம் ஒப்படைக் கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது உடல் மூலக்கொத்தளம் சுடு காட்டில் எரியூட்டப்பட்டது.