states

img

காலியாக உள்ள 3 ஆயிரம் பணியிடங்களை நிரப்பிடுக!

சேலம், ஏப்.30- தமிழ்நாடு அரசு விரைவு போக்கு வரத்து கழகத்தில் காலியாக உள்ள 3 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) வலி யுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு)  மாநில மாநாடு சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டை சம்மேளன தலைவர் அ. சவுந்தரராசன் துவக்கி வைத்து  பேசினார். தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஊழியர் சம்மேள னத்தின் பொதுச்செயலாளர் கே. ஆறுமுகநயினார் சிறப்புரையாற்றி னார். மாநில பொதுச்செயலாளர் எம். கனகராஜ், பொருளாளர் எம். ரவி ஆகியோர் அறிக்கையை முன் வைத்து பேசினர். இம்மாநாட்டில் 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை உடனடியாக துவங்க வேண்டும். அரசு விரைவு போக்கு வரத்து கழகத்தில் உள்ள 3 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும்.

தொழிலா ளர்களுக்கு போதிய ஓய்வு கொடுத்து பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய மாநிலத் தலைவராக டபிள்யு. ஐ.அருள்தாஸ், பொதுச் செயலாள ராக எம்.கனகராஜ், பொருளாளராக எம்.ரவி, துணை பொதுச் செயலா ளர்களாக டென்னிஸ் ஆன்டனி, சுந்தர்சிங், என்.முருகேசன், விஜய ராகவன், உதவித் தலைவர்களாக ஏ.ரைமெண்ட், எஸ்.நடராஜன், எம்.கண்ணன், பி.கோதண்டபாணி, பி. செல்லப்பன், எம்.கருப்பசாமி, கே. ஜெயராமன், எஸ்.செர்கான், பி. வெங்கடேசன், ஆர்.அருண், டி.எஸ். ஜான்ராஜன், பாஸ்கரன் செல்ல துரை, குமார், சடகோபன், எஸ்.முத்துவேல் ஆகியோரும், உதவிச் செயலாளர்களாக எஸ்.முத்துப்பாண்டி, ஏ. அசோக், ஆர்.பிச்சைமணி, பொன்  ராஜ், ஆர்.சரவணன், பி.முருகேசன், சி.செந்தில் குமார், செந்தில், ரவிச்சந்  திரன், ஜே.ஏசுதாஸ், ஜெயக்குமார், ஆரோக்கியராஜ், ரவி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.