states

தீப்பெட்டித் தொழில்: மூலப்பொருள் கிடைக்க அரசு ஏற்பாடு

சென்னை,ஏப்.12- தீப்பெட்டி தொழிலுக்கு தேவை யான மூல பொருள் கிடைக்க அரசு ஏற்பாடு செய்திருக்கிறது என்று ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு, தீப்பெட்டி தொழி லுக்கு தேவையான மூலப் பொருட்க ளின் விலை உயர்வு தொடர்பாக சிபிஎம்,  அதிமுக, திமுக பாமக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றகுழுத் தலைவர் நாகைமாலி,“தீப்பெட்டி தொழில் என்பது தென் மாவட்டத்தை சேர்ந்த தூத்துக்குடி, விருதுநகர் மாவ ட்டங்களில் வசிக்கும் ஏழை-எளிய குடும்பங்களை சார்ந்த 6 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகும். இந்த தொழிலாளர்கள் கொரோனா காலக்கட்டத்தில் வேலையிழந்து நிர்கதியாக நின்றனர்.

இந்த சூழ்நிலையில், தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாலும் அந்த தொழிலில் ஈடுபட்டு வரும் மக்களின் வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது”என்றார். கடம்பூர் ராஜூ அதிமுக: தென் மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்த படியாக முக்கிய தொழிலாக தீப்பெட்டி தொழில் உள்ளது. தற்போது மூலப்பொருட்களின் விலை 40 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதால், 6 லட்சம் தொழிலாளர்கள், ஏழைப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூல பொருள் விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும். ஏ.ஏ.ஆர்.சீனிவாசன் திமுக:  விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிலில் நேரடியாகவும்,  மறைமுகமாகவும் 1 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா காலத்தில் பெரும் சிரமத்தை சந்தித்த அந்த தொழி லாளர்கள் தற்போது, மூலப்  பொருட்களின் விலை உயர்வு மற்றும் உற்பத்தி பாதிப்பு போன்ற  காரணங்களால் மேலும் பாதிக்கப்பட் டுள்ளனர். அசோகன் (காங்) .: பெண்கள் அதிகம் பணிபுரிந்து வரும் தொழில் தீப் பெட்டி தொழில். மூலப் பொருட்க ளின் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அந்த தொழிலாளர்களை அரசு பாதுகாக்க வேண்டும். இதற்கு பதிலளித்து பேசிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பர சன், “தமிழ் நாட்டில் 700க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற் சாலைகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசியில் மட்டும் 500 நிறுவனங்கள் உள்ளது. தற்போது தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். இது தொடர்பாக துறை அதிகாரி களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது” என்றார். ரஷ்யா-உக்ரைன் போர், பெலாரஸ் நாடு மீது அமெரிக்க விதித்திருக்கும் பொருளாதார தடைகள் காரணமாக பொட்டாஷியம் குளேரைடு விலை 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. அதேபோல் மெழுகு விலை, காகித அட்டை விலையும் உயர்ந்துள்ளது. கழிவு காகித தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. இப்பிரச்சனையை கருத்தில் கொண்டு, சிட்கோ  மூலம் சிபிசிஎல் நிறுவனத்தில் மெழுகை மொத்தமாக கொள்முதல் செய்து தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. காகித அட்டை தட்டுப்பாடும் படிப்படியாக குறையும் என்று கூறியுள்ளனர். பொட்டாசியம், குளோரைடு ஜோர்டான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அன்பரசன் கூறினார்.