states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஞானவாபி மசூதி: வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கும்!

இந்துக் கோயிலை இடித்தே வாரணாசியிலுள்ள ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில், ஞானவாபி மசூதி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானவாபி மசூதியை ஆய்வு செய்த குழுவினர், ஆய்வு விவரங்களை கசியவிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், மசூதியில் நடந்த ஆய்வின் இறுதி அறிக்கை விவரங்களை நீதிபதிகளிடம் மட்டுமே அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

லாலு பிரசாத் மீது புதிய ஊழல் வழக்கு: சிபிஐ ரெய்டு

லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்த போது 2004 முதல் 2009 வரை ஆட்சேர்ப்பில் முறைகேடு செய்ததாக சிபிஐ புதிய குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. ரயில்வே வேலைகளை வழங்குவதற்காக லாலு பிரசாத் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி, மகளும் மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பார்தி உள்ளிட்டோர் நிலம் மற்றும் சொத்துக்களை லஞ்சமாக பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதையொட்டி, வெள்ளிக்கிழமையன்று லாலு பிரசாத்திற்கு சொந்தமான 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிலும் ஈடுபட்டனர். பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் மட்டும் 4 இடங்களில் சோதனை நடைபெற்றது. 5 மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளிலும் அண்மையில்தான் லாலு ஜாமீன் பெற்றிருந்தார். இந்நிலையில், அவருக்கு எதிராக புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓராண்டு சிறைத் தண்டனை: சித்து சரணடைந்தார்! 

1988-ஆம் ஆண்டு, காருக்கு வழிவிடுவது தொடர்பான பிரச்சனையில் கர்நாம் சிங் (65) என்ற முதியவரைத் தாக்கி உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருந்த வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இதனிடையே, சரணடைவதற்கு சித்து தரப்பில் கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், அதனை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து பாட்டியாலா நீதிமன்றத்தில் சித்து சரணடைந்துள்ளார். மருத்துவப் பரிசோதனைக்குப் பின் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.

காஷ்மீர் சுரங்கப் பாதை விபத்து: 3 பேர் காயம்!

ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி வியாழனன்று இரவு 10.15-க்கு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மூன்று பேர் வெள்ளியன்று காலை மீட்கப்பட்டு ராம்பன் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு கோலா (33) என்று தெரிய வந்தது. அவர் மேல் சிகிச்சைக்காக ஜிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும், இந்த விபத்தில், சுமார் 10 தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதுகலை பட்டப்படிப்புக்கும் ‘கியூட்’ நுழைவுத்தேர்வு

நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு (CUET) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்காக மாணவர்கள் தற்போது விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கும் இந்தாண்டு முதல் நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். ஜூலை 3-வது வாரத்தில் இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும், ஜூன் 18 ஆம் தேதிக்குள் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

காங்கிரசுக்கு படுதோல்வி : பிரசாந்த் கிஷோர் கணிப்பு

குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். “உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் பற்றி கருத்து சொல்லுமாறு என்னை அடிக்கடி கேட்டு வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, அந்தக் கூட்டம் அர்த்தமுள்ளதாக எந்த முடிவையும் எட்டவில்லை. தன் இருப்பை உறுதி செய்துள்ளதோடு, காங்கிரஸ் தலைமையின் காலத்தை நீட்டித்துள்ளதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. இவையும் குஜராத், இமாச்சலப்பிரதேச படுதோல்வி வரையே செல்லுபடியாகும் “ என்று குறிப்பிட்டுள்ளார்.

மொழியை வைத்து சர்ச்சை; மோடி போலிக் கண்ணீர்

“ஒவ்வொரு மாநில மொழியும் நம் நாட்டை பிரதிபலிக்கிறது; ஒவ்வொரு மாநில மொழியும் இந்திய நாட்டின் அடையாளமே!” என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். மேலும், “கடந்த சில நாட்களாக மொழியின் பெயரால் சர்ச்சையைக் கிளப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் ஒவ்வொரு மாநில மொழிக்கும் தாங்கள் (ஒன்றிய அரசு)முக்கியத்துவம் அளிக்கிறோம், அனைத்து மாநில மொழிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையே!” என்றும் பிரதமர் மோடி கூறிக்கொண்டுள்ளார்.

இ.டபிள்யு.எஸ். வரையறை: வழக்கு ஜூலைக்கு ஒத்திவைப்பு

ரூ.8 லட்சம் ஆண்டு வருமானம் கொண்டவர்களை (மாதம் ரூ. 66 ஆயிரம் ஊதியம் பெறுவோர்) பொருளாதாரத்தில் நலிவடைந்த ‘உயர்சாதி’ ஏழைகள் என்று வகைப்படுத்தி, அவர்களுக்கு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சோ்க்கையில், 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. இந்நிலையில், இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டிய சூழலில், கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டதால், விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பதாக டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அறிவித்துள்ளது.

பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் கவலை இருக்காதா?

“சமையல் எரிவாயு விலை, கடந்த 45 நாட்களில் ரூ. 100 உயர்ந்துள்ளது. மீண்டும் ரூ. 3.50 உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக சிலிண்டர் விலை 60 நாட்களில் 457 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது. மீண்டும் ரூ. 8 உயர்த்தப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி குடும்பங்களை சிலிண்டர் நிரப்ப முடியாத நிலைக்கு தள்ளிவிட்ட மோடி அரசின் எரிபொருள் கொள்ளை நாள்தோறும் தொடருகிறது. ஒவ்வொரு இந்தியனும் கவலைப்படுகிறான். ஆனால், பிரதமரும், ஒன்றிய நிதியமைச்சரும் மட்டும் கவலைப்படுவதாக இல்லை” என்று காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.

கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டுப் பாளையம் மற்றும் கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கேரட் கொள் முதல் விலை கிலோ வுக்கு ரூ.25 ரூபாய் முதல்  ரூ.30 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படு கிறது. இதனால் விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஹைதராபாத் பெண் டாக்டர் பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப் பட்ட 4 பேரும் போலி என்  கவுண்ட்டரில் கொல்ல ப்பட்டதாக விசார ணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏ320நியோ விமானம், மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலை யத்தில் இருந்து பெங் களூருவுக்கு புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில் நுட்ப கோளாறு காரண மாக, இன்ஜின் ஒன்று நடு வானில் செயலிழந்தது. இதனால், விமானம் மீண்டும் மும்பை விமான  நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில், 10  தொழிலாளர்கள் மாய மாகியுள்ளனர். மூன்று பேர் காயத்துடன் மீட்கப் பட்டனர். 

மராட்டிய மாநிலம் சந்தி ராபூர் நகரின் புறநகர் பகுதியில் வியாழனன்று இரவு டீசல் ஏற்றிச் சென்ற டேங்கரும், மரம் ஏற்றிச் சென்ற லாரியும் மோதி விபத்துள்ளானது. இதனால், ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.