states

வேங்கைவயல் சம்பவம் 11 பேருக்கு மரபணு பரிசோதனை நடத்த சிபிசிஐடி திட்டம்

புதுக்கோட்டை, ஏப்.20-  வேங்கைவயல் தலித் மக்கள் பயன் படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனித மலம்  கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தே கத்தின்பேரில் 11 பேருக்கு மரபணு பரி சோதனை நடத்த சிபிசிஐடி காவல்துறை யினர் திட்டமிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் தலித் மக்கள் பயன்படுத்தும் மேல்  நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிசம்பர் 26 அன்று தெரியவந்தது. இச்சம்பவத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு  செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்  தது.

இந்நிலையில், கூடுதலாக 11 பேரைக் கொண்ட உயர் அலுவலர் குழுவும் அமைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த  வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசா ருக்கு மாற்றம் செய்யப்பட்டது. திருச்சி  சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பா ளர் பால்பாண்டி தலைமையிலான போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்  சம்பவத்தில் குடிநீர்த் தொட்டியில் கலக்கப்  பட்ட மனிதக் கழிவு ஏற்கெனவே பரிசோத னைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டி ருந்தது. இந்த நிலையில், வேங்கைவயல் குடியி ருப்பைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 9 பேருக்கும், இறையூர் கிராமத்தைச் சேர்ந்த  ஒருவர் மற்றும் முத்துக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் பத்மாவின் கணவர் முத்  தையா ஆகிய 11 பேருக்கும் மரபணு பரி சோதனை நடத்த சிபிசிஐடி காவல்துறை யினர் முடிவு செய்தனர். இதுகுறித்து முறையான கடிதத்தை வழக்கு நடைபெற்று வரும் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் அளித்தனர். இதனைத் தொடர்ந்து மரபணு பரி சோதனை நடத்துவதற்கான கடிதத்தை நீதி பதி ஆர்.சத்யா, அரசு மருத்துவக் கல்லூரி  உதவிப் பேராசிரியருக்கு ஏப்ரல் 18 அன்று  அளித்துள்ளார். ரத்த மாதிரிகள் சேக ரிக்கப்பட்டு பரிசோதனை நடத்த வேண்டி யவர்களின் பெயர்ப் பட்டியலும் வழங்கப் பட்டுள்ளது. இதன்படி, வரும் திங்கள்கிழமை (ஏப்.24) புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடைபெறவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.            (ந.நி)