சென்னை, மே 14- உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டாம் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் மு.சி.முருகேசன், பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு ஒரு இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கைகள் தொடர்பான செய்தி கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதேநேரம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குறித்து வரும் செய்திகள் மன வேதனையை தருவதாக உள்ளது. ஏதே பெரும்பாலான அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதாக உள்ளது. இது உண்மையல்ல.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்கவில்லை. அதனை சுட்டிக்காட்டி அரசு உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் எங்களுக்கு எந்தவொரு ஆட்சே பனையும் இல்லை. கடந்த ஆண்டு அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்த, உபயோகப்படுத்திய சமையல் எண்ணெய்யை பயோடீசல் தயாரிக்க சேகரிப் பதும், மீதமான கைப்படாத உணவுகளை தேவைப்படுவோருக்கு வழங்கும் திட்டமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பாது காப்பான உணவு அனைவருக்கும் கிடைக்க உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். அனைத்திற்கும் மேலாக, மற்ற மாநிலங்களில் இல்லாத ஒரு சிறப்பு தமிழ கத்தில் உள்ளது. அது உணவு தொடர்பான புகார்களை அளிக்க மாநில உணவு பாதுகாப்பு ஆணையரகத்தில் 9444042322 என்ற பிரத்தியேக வாட்சப் எண் கொடுக்கப்பட் டுள்ளது. இதில் வரும் புகார்கள் 24 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு, புகார்தார ருக்கும் தகவல் அனுப்பிவைக்கப்படுகிறது. புகார்தாரர் பற்றிய ரகசியம் பாதுகாக்க படுகிறது. எனவே ஊடக நண்பர்கள் அனைவரும் தயவுசெய்து ஒட்டுமொத்தமாக பொத்தாம் பொதுவாக புகார்களை தெரிவித்து பொதுமக்கள், உணவு பாதுகாப்பு துறை மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்க வைக்க வேண்டாம் என்று தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில நிர்வாகிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.