states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. டிச.31 முதல் பழைய மாடல் போன்கள், பழைய இயங்குதளம் கொண்ட போன்கள் என  49 வகையான போன் களில் வாட்ஸ் அப் செயலி தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும் என வாட்ஸ் அப் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  2. இந்துஸ்தான் பெட்ரோ லியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (HPCL) புதிய இயக்குநராக (மார்க்கெட்டிங்) அமித் கர்க் நியமிக்கப்பட்டுள் ளார். அமித் கர்க் இதற்கு முன்பு பாரத் பெட்ரோலி யம் கார்ப்பரேஷன் லிமி டெட் (BPCL) நிறு வனத்தில் செயல் இயக்கு னராக (விமானப் போக்கு வரத்து) இருந்தார்.
  3. தென் கொரியாவில் நாக்லேரியா பவ்லேரி என்ற பிரைன் ஈட்டிங் (மூளையை தின்னும்) “அமீபா” தாக்கி 50 வயது மிக்க நபர் உயிரிழந்தார். மூளையைக் தாக்கி மனி தர்களை கொல்லும் இந்த நாக்லேரியா பவ்லேரி அமீபா அவ்வளவாக பர வாது. ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் உலகம் முழு வதும் 381 பேர் உயிரிழந்த னர் என்பது குறிப்பிடத் தக்கது. 
  4. மகாராஷ்டிராவில் அம்மை நோயால் பாதிக்கப் படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. மாநிலத்தில் அம்மை நோயால் பாதிப்பு எண்ணிக்கை 1,162-ஆக அதிகரித்துள்ள நிலையில், தலைநகர் மும்பையில் மட்டும் 514 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 9 குழந்தைகள் அம்மைக்கு நோய்க்கு பலியாகியுள்ளனர்.
  5. பராமரிப்பு பணிகளுக் காக இராமேஸ்வரம் - பாம்பன் ரயில் பாலத்தில் டிசம்பர் 31 வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
  6. முன்னாள் சோவியத் நாடுகள் உருவாக்கிய காமன்வெல்த் சுதந்திர நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்துப் பேசவிருக்கிறார்கள். தற்போது இந்த அமைப்பில் அஜெர்பைஜான், ஆர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மோல்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள்  உள்ளன. பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் சில நடப்பு சர்வதேச  நிகழ்வுகள் குறித்து அவர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
  7. தங்கள் நாட்டில் நிலவும் குறைவான பணவீக்கத்தைச் சுட்டிக்காட்டியுள்ள பொலிவியாவின் ஜனாதிபதி லூயிஸ் அர்ஸ், “ஒரு நிலையான பொருளாதாரமாக பொலிவியா உள்ளது.  இதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை. வரும் ஆண்டில் இங்கிருந்து செய்யவிருக்கும் ஏற்றுமதியில் புதிய சாதனைகள் படைக்கப்படும். தென் அமெரிக்காவிலேயே பொலிவியாவில்தான் இவ்வளவு குறைவான பணவீக்கம் இருக்கிறது. சொல்லப்போனால், உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
  8. ஈரானுக்கும், சவூதி அரேபியாவிற்கும் இடையில் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று ஈரானின் வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் நாசர் கனானி தெரிவித்துள்ளார். இராக் அரசின் முன்முயற்சியால் ஏற்கனவே ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. புதிய  பேச்சுவார்த்தையும் இராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வமான உயர்மட்டக்குழு இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வார்கள்.