states

ஈபிஎஸ் நிதானம் தவறியுள்ளார்: துரைமுருகன் விமர்சனம்!

சென்னை,செப்.26- அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் காரணமாக எடப்பாடி பழனிசாமி நிதா னம் தவறியுள்ளதாக நீர்வளத் துறை  அமைச்சர் துரைமுருகன் தெரிவித் துள்ளார். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் ஆந்திராவின் முயற் சிகளை உடனடியாக தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (செப்.25) அறிக்கை வெளி யிட்டார். இதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அதிமுக கட்சியில் ஏற்பட்ட  பிளவின் காரணமாக எடப்பாடி பழனி சாமி இப்போது தடுமாறி போயிருக் கிறார், நிதானம் தவறியிருக்கிறார் என்பது அவரது அறிக்கை மூலம் தெரி கிறது. ‘கையாலாகாத அரசு’, ‘விடியா அரசு’, ‘கும்பகர்ணன் தூக்கம் கொண்ட  அரசு’என்று வார்த்தைகளை கொட்டி யிருக்கிறார். ஆந்திர எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஒரு  நீர்த்தேக்கம் கட்டப்போவதாக ஆந்திர  முதலமைச்சர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியாகி இருக்கி றது.

அது ஒரு பொதுக் கூட்ட செய்தி தான். அந்த செய்தியை வைத்துக் கொண்டு தமிழ்நாடு அரசு என்ன சாதித்துவிட்டது? என்று அவசர குடுக்கையாக எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்து எனக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. இப்படித்தான் முன்னர் ஒரு முறை இதே கணேசபுரத்தில் அணை கட்டப் போவதாக வந்த செய்தியைப் பார்த்து தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து கணேசபுரம் சென்று பார்த்தபோது அப்படி ஒரு அணை கட்டுவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை. இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு களை தமிழ்நாடு அரசு தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை தக்க நேரத்தில் எடுக்கும். இந்த நிர்வாக ரீதியான செயல்பாடுகள் எதுவும் எடப் பாடியாருக்கு தெரிந்திருக்காது. காரணம் அவர் எந்த அணையை யும் கட்டவில்லை. அந்தரத்தில் நீர்ப்பாய்ச்சும் அரசாங்கம் நடத்தி விட்டு போனவருக்கு நிர்வாக நடை முறைகள் எப்படி தெரியும்? இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.