திருப்பூர், பிப். 15 - பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய பின்ன லாடை, விசைத்தறி உள்ளிட்ட ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க நூல் விலையை கட்டுப்படுத்தி சீராக நிலையாக வைத்திருக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய திருப்பூர் மாவட்ட தொழில் பாதுகாப்பு தொழிலாளர் வாழ்வுரிமை மாநாட்டில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் மாவட்ட தொழில் பாதுகாப்பு, தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு செவ்வாயன்று மாலை நடைபெற் றது. திருப்பூர் அரிசிக்கடை வீதியில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் வரவேற்றுப் பேசினார். இம்மாநாட்டில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், தென்னிந் திய பனியன் உற்பத்தியாளர் சங்கப் பொதுச் செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன்,
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தி யாளர் சங்கத் தலைவர் எம்.பி. முத்துரத்தினம், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் திருப்பூர் தொழில் களைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினர். இதையடுத்து சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளு மன்றக் குழு தலைவர் பி.ஆர்.நட ராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். முன்ன தாக சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ் தொழில் பாது காப்பு கோரி தீர்மானத்தை முன் மொழிய, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் வழிமொழிந்தார். தொழிலாளர் வாழ்வுரிமை காக்க கோரும் தீர்மா னத்தை சிஐடியு பனியன் தொழிலா ளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் முன்மொழிய, விசைத் தறித் தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் பி.முத்துசாமி வழிமொழிந்தார். இம்மாநாட்டில் சுமார் 1000 பேர் கலந்து கொண்ட னர். மாநாட்டின் நிறைவாக சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி நன்றி கூறினார்.
தீர்மானம்
இம்மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தொழில் பாதுகாப்பு கோரும் தீர்மானம் வருமாறு: ஜவுளி தொழில் தற்போது மிகப் பெரும் நெருக்கடியை சந்தித் துக் கொண்டிருக்கிறது. பனியன், விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி தொழில்களைப் பாதுகாத்திட மூலப்பொருளான பருத்தி, பஞ்சு மற்றும் நூல் விலையை சீராக வைத்திருப்பது முக்கியம். அத்தி யாவசியப் பொருட்கள் பட்டியலில் மீண்டும் பருத்தியை இணைப்பது டன், முன்பேர வர்த்தகப் பட்டியலில் இருந்து பஞ்சை நீக்க வேண்டும். உள்நாட்டு ஜவுளி தொழில் களின் தேவைகளை புரிந்து அதற் கேற்ப பருத்தி நூல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும், பஞ்சு இறக்குமதிக்கான வரியை நீக்க வேண்டும்.
இந்திய பருத்தி கழகம், விவசாயிகளிடம் நியாய மான விலையில் பருத்தி கொள் முதல் செய்து பனியன், விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கி பஞ்சு, நூல் தட்டுப்பாடு இன்றி சீரான விலை யில் கிடைக்க செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில் களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் ஜி.எஸ்.டி வரிக் கொள்கையை மாற்றி வரி குறைப்பு செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்தர ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மீண்டு எழுவதற்கு நீண்டகாலக் கடன்களை வழங்க வேண்டும். உள்நாட்டுச் சந்தையை பலப் படுத்துவதற்கு, குறிப்பாக, விவ சாயிகள், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்த வேண்டும். மாநில அரசு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கணக்கீட்டு முறை யை மாதாமாதம் செய்திடவேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கணக்கான தொழி லாளர்களுக்கு வாழ்வளிக்கும் கோழிப்பண்ணை, தேங்காய் எண்ணெய் உற்பத்தி, தென்னை சார் தொழில், அரிசி ஆலை உள்ளி ட்ட தொழில்களை பாதுகாக்கவும், வளர்க்கவும், ஆக்கபூர்வமான, திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.