states

திண்டுக்கல்லில் தீக்கதிர் சந்தா தொகை ரூ.8.84 லட்சம் வழங்கல்

திண்டுக்கல், நவ.18- திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி தோழர் வி.பி.சிந்தன் நினைவரங்கத்தில் வெள்ளியன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு  திண்டுக்கல் மாவட்ட  தீக்கதிர் பொறுப்பாளரும் கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினருமான டி.முத்துச்சாமி தலைமை வகித்தார். நகரச்செயலாளர் ஏ.அரபுமுகமது வரவேற்றார்.  திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பாக 320 ஆண்டு சந்தாக்கள், 213  ஆறு மாத சந்தாக்கள், 101 ரெகுலர் சந்தாக்கள் என மொத்தம் 634 சந்தாக்களுக்கான தொகை 8 லட்சத்து 84 ஆயிரத்து 850 ரூபாயை டி.முத்துச்சாமி,மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம்  வழங்கினார்.  தீக்கதிர் ஆசிரியர்  மதுக்கூர் இராமலிங்கம். முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் மற்றும் மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றியச்செயலாளர் சரத்குமார் நன்றி கூறினார். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில்  1070 தீக்கதிர் நாளிதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. இத்துடன் சேர்த்து  மொத்தம் 1744 வர உள்ளது. மேலும் மாநிலக்குழு தீர்மானித்த அடிப்படையில் விரைவில் 2 ஆயிரம் சந்தாக் களை நிறைவு செய்திட வேண்டும் என்று மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.          (நநி)