states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மணிப்பூர் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம்

புதுதில்லி, நவ. 20 - மணிப்பூர் தலைமை நீதி பதியாக உள்ள சித்தா ர்த் மிருதுள் வியாழக்கிழ மையுடன் (நவ. 21) ஓய்வு பெறவுள்ள நிலையில், அப்பதவிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. கிருஷ்ணகுமாரை நிய மிக்க கொலீஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத் திருந்தது. இந்த நிலையில், தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த குடி யரசுத் தலைவர் டி. கிருஷ்ண குமாரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். இதன்மூலம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66-ஆக குறைந்துள்ளது. நீதிபதி பதவி காலியிடங்களின் எண்ணிக்கை 9-ஆக அதி கரித்துள்ளது.

தில்லி காற்று மாசு:  வீட்டிலிருந்து  வேலை செய்ய உத்தரவு!

புதுதில்லி, நவ. 20 - தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 441, திங்கள்கிழமை 494, செவ் வாய்க்கிழமை 460 ஆக காற்றின் தரக்குறியீடு மிக தீவிரமாக மோச மடைந்துள்ளது.  இந்நிலையில், “காற்று மாசுபாட்டைக் குறைக்க, அரசு அலுவலக ஊழியர்கள் 50 சதவிகிதத்தினர் வீட்டில் இருந்தே வேலை செய்வார் கள்” என சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேட்டூர் அணை 'நீர்மட்டம் உயர்வு!

சேலம், நவ. 20 - மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடி க்கு 9 ஆயிரத்து 542 கன அடியிலிருந்து விநாடிக்கு 9 ஆயிரத்து 269 கன அடியாக குறைந்துள்ளது. எனி னும், அணையில் இருந்து  காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 1000 கன அடி விகிதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடி விகிதமும் மட்டுமே தண்ணீர் திறக்கப் பட்டு வருகிறது. இதனால், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்ப தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.44 அடியிலி ருந்து 107.91 அடியாக உயர்ந்துள்ளது.

தோஷகானா வழக்கில்  இம்ரான் கானுக்கு ஜாமீன்

இஸ்லாமாபாத், நவ. 20 - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இரண்டாவது தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பிரதமர் பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட் களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபீ ஆகிய இரு வரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. தோஷகானா என குறிப்பி டப்படும் இந்த வழக்கில் இம்ரான்கானுக்கு தற் போது ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது. இன்னும் வேறு பல வழக்குகள் உள்ள தால் இம்ரான் கான் விடுதலை யாவதில் சிக்கல்நீடிக்கிறது.

மகாராஷ்டிராவில் 58 சதவீதம், ஜார்க்கண்ட்டில் 67 சதவீத வாக்கு பதிவு

புதுதில்லி, நவ. 20 - ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகவும், மகாராஷ்டிரா சட்டப்பேர வைக்கு நவம்பர் 20-ஆம் தேதி ஒரே கட்டமாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.  இதில், ஜார்க்கண்ட்டில் மொத்த முள்ள 81 தொகுதிகளில் முதற்கட்ட மாக 43 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 13 அன்று வாக்குப் பதிவு நடை பெற்றது. இதில், 64.86 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், மகாராஷ்டிரா வின் 288 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட்டில் எஞ்சியுள்ள 38 தொகுதிகளுக்கும் புதன்கிழமையன்று காலை 7 மணிக்குத் துவங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது.  மகாராஷ்டிராவில் 36 மாவட்டங்களில் மொத்தம் 9 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், இவர்களுக்காக 1 லட்சத்து  186 வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தன. இந்நிலையில், வாக்குப் பதிவு முடிவில் மாலை 5 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் 58.22 சதவிகித வாக்குகள் பதிவாகின. ஜார்க்கண்ட் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் 38 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒரு கோடிக்கும் அதிக மானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி இங்கு 67.59 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலோடு, உத்தரப்பிர தேசம், பஞ்சாப், கேரளம் மற்றும் உத்தர கண்ட் மாநிலங்களில் உள்ள 15 சட்ட மன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் புதன்கிழமை நடை பெற்றது.

இளைஞரை சுட்டுக்கொன்ற காவல் அதிகாரியின் வீடு மீது தாக்குதல் பதுங்கு குழியில் தங்கும் காவல்துறையினர்

பாஜக ஆளும் மணிப்பூர் மாநி லத்தின் ஜிரிபாம் மாவட்டத்  தில் கடந்த வாரம் சிஆர்பிஆப்  படை வீரர்களின் தாக்குதலில் குக்கி பழங்  குடி பிரிவைச் சேர்ந்த 11 பேர் உயிரி ழந்தனர். அதே போல மெய்டெய் பிரி வைச் சேர்ந்த 6 பேர் ஜிரிபாம் ஆற்றில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்த 2 சம்பவங்கள் மற்றும் ஆயுதப்படை சட்டம்  அமல் போன்றவற்றால் மணிப்பூரில் மீண்டும் உள்நாட்டுப் போருக்கு இணை யாக வன்முறைச் சம்பவங்கள் தலை தூக்கியுள்ளன. இந்நிலையில், மணிப்பூர் காவல் துறையின் துப்பாக்கிச்சூட்டில் 22 வயது  இளைஞர் கே.அதௌபா உயிரிழந்தார்.  அவரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதி காரியான மூத்த காவல் கண்காணிப்பா ளர் நெக்டர் சஞ்சன்பாமின் வீடு தாக்குத லுக்கு உள்ளானது. பல்வேறு அடுக்கு பாதுகாப்புகளை மீறி வீட்டை மர்ம நபர்  கள் அடித்து நொறுக்கியதால், நெக்டர்  சஞ்சன்பாமின் அவரது பாதுகாப்புப் படை குழுவினர் தஞ்சம் அடைந்திருந்த ஜிரிபாம் பொதுப்பணித்துறை விருந்தி னர் மாளிகையையும் போராட்டக்காரர் கள் சுற்றி வளைத்தனர். இதே போல  மணிப்பூர் காவல்துறையின் அதிகாரிகள்  பாதுகாப்புப் பணியில் ஈடுபடாமல் போராட்டக்காரர்களுக்கு பயந்து பதுங்கு குழியில் இருப்பதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.

தெலுங்கானாவில் அதிர்ச்சி வங்கியில் ரூ.15 கோடி  தங்க நகை கொள்ள

தெலுங்கானா மாநிலம் வாரங் கல் அருகே ராயபர்த்தி பகுதி யில் ஸ்டேட் பேங்க் ஆப் இந் தியா கிளை செயல்பட்டு வருகிறது. இந்த  வங்கி கிளையில் 3 லாக்கர்கள் உள்ளன.  அதில் ஒரு லாக்கரை கேஸ் கட்டர் மூலம்  கொள்ளையர்கள் வெட்டி எடுத்து திறந்  துள்ளனர். மேலும் லாக்கரில் வைக்கப் பட்டிருந்த 500 வாடிக்கையாளர்களின் நகைகளில், 497 பேரின் நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ள னர். கொள்ளையர்கள் செல்லும் பொழுது  சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த  ஹார்ட் டிஸ்கையும் கையோடு எடுத்துச்  சென்றுவிட்டனர். இது குறித்து தகவல றிந்த பின் பொதுமக்கள் அளித்த புகாரின்  பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் 5 தனிப்படைகளை அமைத்து போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி 

சென்னை,நவ.20- ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன் உற்பத்தி ஆலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியது.ஒசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. மேலும் ரூ.3,699 கோடி முதலீட்டில் ஆலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ஆலை 5 லட்சம் ச.மீ. பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

குற்ற வழக்கு தொடர்வு  இயக்குநர் நியமனம் 

சென்னை,நவ.20-  தமிழ்நாடு குற்ற வழக்கு தொடர்வுத்துறையின் இயக்குநர் சித்ராதேவி விருப்ப ஓய்வில் சென்றதால் அந்த இடம் காலியாக இருந்தது. அதற்கு அடுத்த இடத்திலிருந்த இணை இயக்குநரை பதவி உயர்வின் மூலம் பி.என்.எஸ் சட்டப் பிரிவுகளின்படி இயக்குநராக நியமிக்க வழியில்லை. எனவே, தற்காலிக பொறுப்பு இயக்குநராக மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழ்நாடு அரசு இயக்குநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்களை அனுப்பக்கோரி விளம்பரம் செய்திருந்தது. அதன் அடிப்படையில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தேர்வுகுழு தகுதியான விண்ணப்பதாரர்களை அழைத்து நேர்முக தேர்வு நடத்தியது. இந்நிலையில், குற்ற வழக்கு தொடர்வுத் துறையின் புதிய இயக்குநராக வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜாவை தேர்வு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. அதனடிப்படையில் வழக்கறிஞர் கிருஷ்ணராஜா இயக்குநராக பொறுப்பேற்றார். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கிருஷ்ணராஜா மதுரையை சேர்ந்தவர். தமிழ்நாடு போக்குவரத்துக்கழகத்தின் நிலை வழக்கறிஞராகவும், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் பணிபுரிந்தவர்.

அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை, நவ. 20 - அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பெருந்திரள் முறையீடு போராட்டத்தை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் ஒத்திவைத்துள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புதல், காலமுறை ஊதியம், பணியிட மாறுதல், பணிக்கொடை, கோடைக்கால விடுமுறை உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 20 அன்று சென்னை தரமணியில் உள்ள இயக்குநர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், இயக்குநர் மெர்சி ரம்யா ஆகியோர் நவம்பர் 19 அன்று தலைமைச் செயலகத்தில் சங்கத்தின் தலைவர் ரத்னமாலா, பொதுச்செயலாளர் டி.டெய்சி, பொருளாளர் தேவமணி, துணைத் தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஹேமப்பிரியா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து டி.டெய்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானது. 20 கோரிக்கைகளில் 14 கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜன.16-18 சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி

சென்னை,நவ.20-  சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி 2025 ஜன வரி 16 முதல் 18 வரை நடை பெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  இந்த ஆண்டு சிறுவர் இலக்கியம் குறித்த பேச்சுக் களுக்கு வசதியாக ஒரு அரங்கு திட்டமிடப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்த னர்.  சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி 2025,  ஜனவரி 16 முதல் 18 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரி வித்துள்ளார்.  இத்தாலியின் பொலோக்னா  குழந்தைகள் புத்தக கண் காட்சி 2025 ஆம் ஆண்டுக் கான கவுரவ விருந்தினராக இருக்கும் என்றும் தெரி வித்துள்ளார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஸ், “இந்த புத்தக கண்காட்சியில் சுமார் 50 நாடுகள் பங்கேற்று 1,000 புரிந்துணர்வு ஒப்பந்தங் களில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கிறோம்.  தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்  தலா ரூ.6 கோடி செலவில் மாவட்ட மைய நூலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது” என்றார்.

பல்கலை.  ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு

சென்னை,நவ‌.20- பல்கலைக்கழக ஊழி யர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு குறித்து முக்கிய அறிவிப்பு வெளி யிடப்பட்டது. மாநில பல்கலைக்கழ கங்களில் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர் கள் பயோமெட்ரிக் முறை களைப் பயன்படுத்தி வரு கையை குறிக்க வேண்டும். இதுகுறித்து உயர் கல்வித் துறை கூடுதல் தலை மைச் செயலாளர் செவ்வாய்க் கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  கற்பித் தல் மற்றும் ஆசிரியர் அல் லாத ஊழியர்கள் தாமத மாக வருவதையும், “தகுதி வாய்ந்த அதிகாரியின் முறை யான அனுமதியின்றி சீக்கிரம் வெளியேறு வதையும்” வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படு கிறது. பல்கலைக்கழக ஊழி யர்கள் தினமும் நிறுவனத் திற்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் வருகையை பயோமெட்ரிக் கருவியில் குறிக்க வேண் டும். மேலும் கோப்புகளை அனுப்ப மின்னணு அமைப்பு களை பயன்படுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை இடதுசாரி அரசின்  மற்றொரு முன்னெடுப்பு 

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மாற்றுத்திறனாளி ஒருவர், ஆளும் கட்சியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் விகிதாச்சார பிரதிநிதித்துவ அடைப்படையில் எம்.பி.யாக சுகத் வசந்த சில்வா  தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது  பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் கவுன்சில் தலைவராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை மக்கள் தொகையில் 9 சதவீதம் பேர் பார்வைத்திறன் குறையுடையோர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரத்தை முடக்கும்  மசோதாவுக்கு கண்டனம் 

தென் அமெரிக்க நாட்டிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்த அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட மசோதாவிற்கு வெனிசுலா அரசு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த மசோதா வெனிசுலாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பொருளாதார உறவுகளையும் ஒத்துழைப்பையும் தடுக்க முயல்கிறது. ஐ.நா. சாசனத்தை தெளிவாக மீறுகிறது என்று வெனிசுலாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம்  அறிக்கை வெளியிட்டுள்ளது.

இராக்கை தாக்க இஸ்ரேல் திட்டம் 

மேற்கு ஆசியாவில் போரை விரிவுபடுத்த இஸ்ரேல் துடிக்கிறது என இராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி குற்றம் சாட்டியுள்ளார். இராக்கில் செயல்படும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு படைகளுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் என இஸ்ரேல்  வெளியுறவுத் துறை அமைச்சர்  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு  கடிதம் அனுப்பியுள்ளார். இது  பிராந்தியத்தில் போரை விரிவுபடுத்துவதற்கான இஸ்ரே லின் முயற்சியின் ஒருபகுதி எனவும் தெரிவித்துள்ளார்.

சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற இடைக்கால தடை

மதுரை,நவ.20-  மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 600 ஏக்கர் நிலம் மதுரை விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு என்ற கிராமத்தில் கையகப்படு த்தப்பட்டது. இங்கிருந்து வெளி யேற்றுவதற்கு முன் மாநக ராட்சி பகுதிகளில் மாற்று இடம் வழங்க பரீசீலனை செய்ய வேண்டும். அதுவரை தங்களை  வெளியேற்றுவதற்கு இடைக் கால தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி  கிராம மக்கள் சார்பாக 250 நபர்கள் உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி மஞ்சுளா,  சின்ன உடைப்பு கிராம மக்களை மாவட்ட நிர்வாகம் வெளியேற்றுவதற்கு இடைக்  கால தடை விதித்து உத்தர விட்டுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையே  தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை

ரியோ டி ஜெனிரோ, நவ. 20 - இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க இருநாடுகளும் திட்ட மிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில்  இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்திப்பு மேற்கொண்டனர். இந்த சந்திப்பை தொடர்ந்து  இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் 2025-இல் துவங்கும் எனவும் ராஜதந்திர வழிமுறை மூலம் வர்த்தகம் குறித்தான முடிவுகள் இறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு கனிமங்கள், இயந்திரங்கள், விலைமதிப்பற்ற ஆபரணக்கற்கள், மருந்துகள், ஆடைகள், இரும்பு மற்றும் எஃகு, ரசாயனங்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.