states

கண்ணகி சகோதரனின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு

சென்னை, ஜூன் 8-  கடலூர் கண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவ கொலை வழக்கில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயு ளாக குறைக்கப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தலித் சமூகத்தை சேர்ந்த முரு கேசன் என்பவர் மாற்று சமூகத்தை சேர்ந்த கண்ணகியை கடந்த 2003-ஆம்  ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் குடும்பத்தினர், இரு வருக்கும் காது மற்றும் மூக்கு வழியாக  விஷத்தை செலுத்தி கொலை செய்தது டன், உடல்களை தனித்தனியாக எரித்த னர்.  இது தொடர்பாக முருகேசனின் உற வினர்கள் விருத்தாசலம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதில், கண்ணகியின் தந்தை, சகோதரர்,

உறவினர்கள் உட்பட 15 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இருப் பினும் வழக்கு விசாரணை சரிவர நடை பெறாததால் இந்த வழக்கு சிபிஐக்கு கைமாறியது.  18 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான கண் ணகியின் சகோதரர் மருதுபாண்டிக்கு மரண தண்டனையும், தந்தை துரை சாமி, உறவினர்கள் 12 பேருக்கு ஆயுள்  தண்டனையும் விதித்து கடலூர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை  எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 13 பேரும் மேல்முறையீடு செய்திருந்தனர்.  இந்நிலையில், வழக்கின் விசாரணை புதனன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், ஏ.என்.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ஆயுளாக குறைத்து நீதிபதிகள் உத்தர விட்டனர். மேலும் கண்ணகியின் தந்தை  துரைசாமி, காவல் ஆய்வாளர் செல்ல முத்து உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்ட னை உறுதியானது. ரங்கசாமி, சின்ன துரை ஆகியோர் வழக்கில் இருந்து விடு விக்கப்பட்டனர். அப்போதைய எஸ்.ஐ. தமிழ்மாறனின் ஆயுள் தண்டனை 2 ஆண்டு  சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது.