states

நக்கீரன் செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு சிபிஎம் வன்மையான கண்டனம்

சென்னை,செப்.20- நக்கீரன் செய்தியாளர் மற்றும் கேமிராமேன் ஆகியோரை கொடூரமாகத் தாக்கிய சமூகவிரோதக் கும்பலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கள்ளக்குறிச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன்  முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமிரா மேன்  அஜீத் ஆகியோர் மீது சமூக விரோதக் கும்பல் கொடூர மாகத் தாக்கியுள்ளது. இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதல் கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. எனவே, இதுகுறித்து தீர விசாரித்து, தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரை யும் அடையாளங்கண்டு பாரபட்சமின்றி உடனடியாக கைது செய்து, வழக்கு தொடுத்திட வேண்டும். தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிட வேண்டும். ஊடகத்துறையினர் சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;