states

காஞ்சிபுரத்தில் சமூகவிரோதிகளின் நடவடிக்கையை அறவே ஒழித்திட உரிய நடவடிக்கை எடுத்திடுக!

முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை, ஜன.18- காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக விரோ திகள் கல்லூரி மாணவியை கத்தி முனை யில் கடத்திச் சென்று, கும்பலாக பாலி யல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்தும், இரவு நேரங்களில் செயின் பறிப்பு, பணம் பறிப்பு, பாலியல் சீண்  டல், பாலியல் வன்கொடுமை  உள்ளிட்டு  சமூக விரோத சக்திகளின் நடவடிக்கை யை அறவே ஒழித்திடும் வகையில் உறுதி யான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்  டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் ஜனவரி 18 புத னன்று கடிதம் எழுதியுள்ளார். அவர் அனுப்பிய கடிதம் வருமாறு:  காஞ்சிபுரம் மாவட்டம், விசாலாட்சி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி கத்தி  முனையில் கும்பல் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்  பெரும் அதிர்ச்சியையும், வேதனையை யும் அளிக்கிறது. இச்சம்பவம் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட  காவல்துறை கண்  காணிப்பாளர் தாமாக முன்வந்து குற்ற வாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட காவல்துறையினர் விரைந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளது பாராட்டுக்குரியதாகும். அதுபோல் ஸ்ரீபெரும்புதூரில் கத்தியைக் காட்டியும்,  காவலர்கள் என்று கூறியும் இரவு நேரங்க ளில் பணம் பறிப்பு, செயின் பறிப்பு  மற்றும் பணிக்குச் சென்று வீடு திரும்பும் 20-க்கும் மேற்பட்ட பெண்களை பாலி யல் வன்கொடுமை செய்த சமூக விரோத  சக்திகளையும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளது பாராட்டுக்குரியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சி புரம் நகரம், வாலஜாபாத், ஸ்ரீபெரும்  புதூர், குன்றத்தூர் ஆகிய தாலுகாக்களி லிருந்து ஏராளமான இளைஞர்கள், பெண் கள், தொழிலாளர்கள் இப்பகுதியில்  செயல்படும் நிறுவனங்களில் இரவு - பக லாக பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதி களில் ஆளில்லாத இடங்களில் சமூக விரோதிகள் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட  சட்டவிரோத போதைப் பொருட்களை உட்கொண்டு அப்பகுதியில் செயின் பறிப்பு, பணம் பறிப்பு மற்றும் கத்தி யைக் காட்டி இளம் பெண்களை பாலியல்  சீண்டல் செய்வது, கும்பல் பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற குற்றச் செயல்கள் அதிகம் செய்து வருகின்ற னர்.  இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் அச்சமும், பதற்றமும் நிலவி வருகிறது.

கடந்த பத்தாண்டுகளாக இத்தகைய சமூகவிரோத நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இச்சமூக விரோத செயல்  களில் ஈடுபடுவோர் அரசியல் செல்வாக்  கின் காரணமாக கைது நடவடிக்கைகளிலி ருந்து தப்பி விடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் தொழி லாளர்கள் அச்சத்தின் காரணமாக காவல்  துறையில் புகார் அளிக்கவும் அஞ்சும்  நிலை உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில்  போதிய அளவில் காவல்துறையினர் எண்ணிக்கை இல்லாததும், ரோந்து நட வடிக்கைகள் குறைந்துள்ளதும் இச்சம்ப வங்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரண மாக உள்ளது என பொதுமக்கள் தெரி விக்கின்றனர்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூகவிரோத சக்திகளின் குற்றச் செயல்களை தடுப்ப தற்கும், சட்டவிரோத போதைப் பொருட் களை தடை செய்வதற்கும் உறுதியான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், பற்றாக்குறையாக உள்ள காவலர்கள் இடத்தை உடன் பூர்த்தி செய்திடவும், காஞ்சிபுரம் நகரம்,  வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்  தூர் ஆகிய தாலுகாக்களில் காவல்  துறை இரவு நேர ரோந்து நடவடிக்கை களை அதிகப்படுத்திடவும், சமூக விரோ தச் செயல்கள் நடக்கும் இடங்களில் புறக்காவல்நிலையங்களை கூடுதலாக்கி டுவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.