திருத்துறைப்பூண்டி, நவ.3 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட குழு சார்பாக தூய்மைப் பணி இயக்கம் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய மூன்று மையங்களில் தீபாவளி சிறப்பு தூய்மைப் பணி இயக்கம் நடைபெற்றது. ஞாயிறன்று திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் நடைபெற்ற தூய்மைப் பணி இயக்கத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன், ஒன்றிய நகர நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், நகரச் செயலாளர் கே.கோபு, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.ஜெயபிரகாஷ், நகரக் குழு உறுப்பினர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையையொட்டி சேர்ந்த அனைத்து குப்பைகளும் தூய்மைப்படுத்தப்பட்டன. வாலிபர் சங்கத்தின் இம்முயற்சி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.