புதுதில்லி, மார்ச் 4 - தில்லியில் நடைபெற்ற உலகப் புத்தகக் கண் காட்சியில், கிறிஸ்தவ அமைப்பு அமைத்திருந்த புத்தக அரங்கை, மதவெறியர்கள் அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது. தில்லி புத்தகக் கண்காட்சியில் ‘தி கிறிஸ்டி யன்ஸ் இன்டர்நேஷனல்’ என்ற சுவிசேஷ கிறிஸ் தவ சங்கத்தினரும் அரங்கு அமைத்துள்ளனர். இந்த அரங்கில் கிறிஸ்தவ மத பிரசுரங்கள் கண் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பைபி ளின் பிரதிகள் இலவசமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த அரங்கிற்கு வந்த ஒரு கும்பல், புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதாக குற்றம் சாட்டியதாக வும், அரங்கில் இருந்த சுவரொட்டிகளைக் கிழித்த தாகவும் கூறப்படுகிறது. அத்துடன், கடையைச் சுற்றி அமர்ந்து கொண்ட வன்முறையாளர்கள், “பைபிள் பந்த் கரோ” (பை பிளை இலவசமாக வழங்கக் கூடாது) என்றும்; “தும் லாக் 25000 ரூபாய் தேகார் லோகோ கா தர்ம பரிவர்தன் கர்வதீன் ஹோ (நீங்கள் மக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற 25000 ரூபாய் கொடுக்கி றீர்கள்)” என்றும் கூறி சுமார் 25 நிமிடம் வரை தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அரங்கிலிருந்து வெளியேற மறுத்து, ஹனுமான் சாலிசாவை வாசித்து, கலவர முயற்சி யில் ஈடுபட்டுள்ளனர். காவித்துண்டு அணிந்து வந்த அவர்கள், ‘ஜெய் ஸ்ரீராம்,’ ‘ஹர் ஹர் மகாதேவ்’ மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கூச்சலும் போட்டுள்ளனர். மார்ச் 1 அன்று பிற்பகல் 2.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் இணையதளங்களில் வெளியான வீடியோக்கள் மூலமே தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிறிஸ்தவ அமைப்பினர் மட்டு மன்றி இந்து, முஸ்லிம், சீக்கிய அமைப்புக்கள் சார்பில் இந்தகண்காட்சியில் அரங்கு அமைக் கப்பட்டு, மதம் சார்ந்த புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், கிறிஸ்தவ அமைப்பினரின் அரங்கு மீது மட்டும் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ள யுனைடெட் கிறிஸ்தவ மன்றத்தின் தலைவர் மைக்கேல் வில்லியம், “நாட்டில் இப்போது புத்த கத்தை விநியோகிப்பது கூட மத மாற்றமாக கருதப் படுகிறது” என்று தனது ஆதங்கத்தை வெளிப் படுத்தியுள்ளார். மேலும், பிரிக்கப்பட்ட வீடு நிலைக் காது; வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தி யாவே பெருமை வாய்ந்தது என்றும் அதனை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சி நடப்பது வருத்தம் அளிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், போராட்டம் நடந்தபோது, “புத்தகங் கள் எதுவும் கிழிக்கப்படவில்லை, எந்த வன்முறை யும் நடக்கவில்லை” என்று ஒன்றிய அரசின் தில்லி காவல்துறை சமாளித்துள்ளது.