அக்.2 முதல் தேர்தல் பிரச்சாரம்!
ஐக்கிய ஜனதாதளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் பாட்னாவில் பேட்டி வருமாறு: “நாடாளுமன்றத் தேர்தலை பாஜக விரைவாக நடத்தக்கூடும் என்ற சந்தே கம் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டே எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் விரைவாக ஒன்றிணைந்துள்ளோம். இதனால், தற்போது பாஜக அச்சமடைந்துள்ளது. எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஒரு பிரச்சனையாக இருக்காது. இதுகுறித்த கலந்துரையாடல் இந்தியா கூட்டணிக்குள் விரைவில் நடக்கும். மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நாடு தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம்”.
இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவிகிதமாகவே இருக்கும்: மூடிஸ்
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாம் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி விவ ரங்களை தேசிய புள்ளியல் அலுவலகம் (NSO) இரண்டு நாட்களுக்கு முன்பு வெளி யிட்டது. அதில், முதலாம் காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவிகிதமாக உள்ளது. இதையொட்டி இந்தியாவின் வளர்ச்சியைக் கணித்துள்ள சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான ‘மூடிஸ்’ (Moody’s) 2023 ஆண்டின் முடிவில், இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சத வீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்
சென்னை, செப். 2- சென்னை தேவி கருமாரி தியேட்டரில் வெள்ளியன்று நடை பெற்ற உலக சினிமா விழா துவக்க விழாவில் ஆர்.எஸ். சிவாஜி பங்கேற்று இருந்தார். விழாவை முடித்து இல்லம் திரும்பிய அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக் கிழமை (செப். 2) அவர் உயிரிழந்தார். நடிகரும், தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகன் தான் ஆர்.எஸ்.சிவாஜி. பிரபல இயக்குநரும், நடிகரு மான சந்தான பாரதியின் சகோதரர்.இவர் லக்கிமேன், கோல மாவு கோகிலா, ஆபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாச னின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த படங்களில் அதிகமாக நடித்துள்ளார். அபூர்வ சகோதரர்கள் (1989) படத்தில் ஜனகராஜை பார்த்து அவர் பேசிய “சார்! நீங்க எங்கேயோ போயிட்டீங்க” என்ற வசனம் மிகப்பிரபலம். இவர் உதவி இயக்குநராகவும், ஒலி வடிவமைப்பாளராகவும், லைன் புரொடியூசராகவும் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். மறைந்த நடிகர் ஆர்.எஸ் சிவாஜியின் உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அவரது மகள் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
பி.லிட் படிப்புக்கான பாடத்திட்டத்தை மாற்ற பாமக எதிர்ப்பு
சென்னை, செப்,2 பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டத்தை சிதைக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என ஏறக்குறைய 50 கல்லூரிகளில் பி.லிட் எனப்படும் இளங்கலை இலக்கியம் பட்டப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. இந்தப் படிப்பின் சிறப்பு களில் ஒன்று, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியங்களை மட்டுமே பாடமாகக் கொண்டது என்பது தான். ஆனால், இப்போது மூன்றாண்டு கால பி.லிட் படிப்பின் முதல் இரு ஆண்டுகளில் பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால், தமிழ் இலக்கியம் தொடர்பான 8 பாடத்தாள்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இது தமிழுக்கு செய்யும் அநீதியாகும். எனவே, பி.லிட் படிப்பு களில் சிறப்புகளையும், அது உருவாக்கப்பட்டதன் நோக்க ங்களையும் புரிந்து கொண்டு, பி.லிட் படிப்புக்கான பாடத் திட்டத்தை சிதைக்காமல், இப்போதுள்ள நிலையிலேயே தொடர அனுமதிக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு களைப் பொறுத்தவரை பி.லிட் கல்வித் தகுதியை பி.ஏ தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையான கல்வித்தகுதி யாக அறிவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விஷ வண்டுகள் கடித்து பலியானவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதி உதவி
சென்னை, செப்.2- மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 80-ராதா நல்லூர் கிராமம், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி.இவர் கடந்த 31 ஆம் தேதி அன்று திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறித்துக் கொண்டிருந்த போது, கதண்டு என்கிற விஷ வண்டுகள் கடித்து காயமடைந்தார். திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயிரிழந்த வீரமணியின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வ தோடு, அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.