சென்னை, ஜன.4- சென்னை சங்கமம் மக்கள் திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டா லின் அழைப்பு விடுத்துள் ளார். “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” குறித்து வெளியிட்டுள்ள வீடி யோவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியிருப்ப தாவது: தனித்த அடை யாளத்தோடு கலை, பண்பாடு, இலக்கியம் என வாழ்ந்திட்ட தமிழர், பின்னாளில் இனப் பகை வர்களின் சூழ்ச்சிக்கு இரை யாகி தங்களது அடை யாளங்களை மறந்தனர். மறத்தமிழரின் மான உணர்வை பகுத்தறிவால் மீட்டெடுத்து, இன எழுச்சி பெற வைத்தது திராவிட இயக்கம். தமிழரின் பண் பாட்டை மீட்டெடுக்கும் திராவிட சிந்தனையின் மற்று மொரு முன்னெடுப்புதான் ‘சென்னை சங்கமம்’. தலைவர் கருணாநிதி ஏற்றி வைத்த கலை பண்பாட்டுச் சுடரை அணை யாது காத்திடும் விதத்தில் தற்போது “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா”
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் வரும் ஜனவரி 13 ஆம் நாள் தொடங்கி 17ஆம் நாள் வரையில் அரசு சார்பில் நடைபெறவிருக்கிறது. வரும் ஜனவரி 13, வெள்ளிக்கிழமையன்று, சென்னை, தீவுத் திடலில் “சென்னை சங்கமம்-2023” நிகழ்வை நான் தொடங்கி வைக்கிறேன். 16 இடங்கள், 60-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள், 600-க்கும் மேற்பட்ட மண்ணின் கலை ஞர்களை ஒன்றிணைத்து, மீண்டும் வருகிறது “சென்னை சங்கமம்”. பறை யாட்டம், கரகாட்டம், மலை வாழ் மக்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நம் பாரம்பரியக் கலை நிகழ்ச்சி கள் நடக்கவிருக்கின்றன. இதோடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனிச் சிறப்பான உணவு வகைகள் உணவுத் திருவிழாவில் இடம்பெறுகின்றன. இலக்கியத் திருவிழாவும் நடைபெற உள்ளது. நம் தமிழ் மண்ணையும், மக்க ளையும், மக்களின் கதைக ளையும் பேசும் இந்தக் கலைகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு பெருமிதம் கொள்கி றது. ‘தமிழர் என்று ஓர் இனம் உண்டு, தனியே அவருக்கு ஒரு குண முண்டு’. ‘கலைகள் யாவி லும் வல்லவனாம், கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்’. இந்த மாபெரும் மக்கள் திருவிழாவிற்கு அனை வரும் வாருங்கள்! வாருங் கள்! நம்ம ஊரு திரு விழாவில் சந்திப்போம்.” இவ்வாறு அந்த வீடியோ வில் கூறியுள்ளார்.