states

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் மாற்றம்

சென்னை,ஜூலை 21- சென்னை ரயில்வே கோட்டத்தின் தாம்பரம் பணிமனையில் பொறியியல் மற்றும் சிக்னல் மேம்படுத்துதல் பணி உள்ளிட்டவை ஜூலை 21  தொடங்கி ஆக.18 வரை நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை தாம்பரம் செல்லும் பல்வேறு ரயில்கள் பகுதி தூரமாகவும், சில  ரயில்கள் முழுமையாகவும் ரத்து செய்யப்படு வதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படு வதோடு, மாற்று வழியில் இயக்கப்படும் என்றும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பராமரிப்பு பணிகள் நடக்கும் நாட்களில் (வண்டி எண்கள்.20665, 20666) நெல்லை-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம்-எழும்பூர் இடையே புறநகர் ரயில் வழித்தடத் தில் இயக்கப்படும். அந்த ரயில் சுமார் 30 நிமி டங்கள் தாமதமாக எழும்பூர் சென்றடையும். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை பொறுத்தவரை  ஆகஸ்ட் மாதம் 14,15,16 ஆம் தேதிகளில் திருச் செந்தூரில் இருந்து விழுப்புரம் வரை மட்டுமே  செல்லும். ஆகஸ்ட் 17 ஆம் தேதி செங்கல்பட்டில்  இருந்து காஞ்சிபுரம், அரக்கோணம் என மாற்று  வழியில் எழும்பூர் செல்லும். அதேநேரம் இரவு நேரங்களில் இயக்கப்ப டும் தென்மாவட்ட ரயில்கள் நெல்லை, பொதிகை, அனந்தபுரி, பாண்டியன், முத்துநகர்,  சிலம்பு உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம்  சிக்னல் பணிகள் முடிவடையும் வரை 20 முதல்  30 நிமிடங்கள் வரை புறநகர் பகுதியில் தாமத மாக இயக்கப்படும். முதல் கட்டமாக இந்த ரயில் இயக்க மாற்றம்  திங்கட்கிழமை (ஜூலை 22) தொடங்கி 31ஆம்  தேதி வரை பொருந்துமாறு அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி தினமும் இரவு 11 மணிக்கு  புறப்படும் (வண்டி எண்.20691) தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா அதிவிரைவு  ரயில் ஜூலை 22 முதல் 31 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் நாகர்கோவிலில் இருந்து தினமும் மாலை 3.50 மணிக்கு புறப்படும் (வண்டி  எண்.20692)  நாகர்கோவில்-தாம்பரம் அந்தி யோதயா அதிவிரைவு ரயில் திங்கட்கிழமை தொடங்கி 31 ஆம் தேதி வரை முழுமை யாக ரத்தாகிறது. அதேபோல் தினமும் மாலை  4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப் பட்டு தாம்பரத்திற்கு செல்லும் செங்கோட்டை -தாம்பரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.20684)  ஜூலை 24,26,27,29,31 ஆம் தேதிகளில் விழுப்பு ரம் வரை மட்டுமே இயங்கும். இந்த ரயிலானது விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.20683) ரயிலானது வரு கிற 24,25,28,30 ஆம் தேதிகளில் தாம்பரத்திற்கு பதிலாக விழுப்புரத்தில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை  ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில்  விழுப்புரம் சந்திப்பில் இருந்து புறப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்படும் தாம்பரம்-நாகர்கோவில் (வண்டி எண். 22657) விரைவு ரயில் வருகிற 24,28,29 மற்றும் 31 ஆம் தேதிகளில் சென்னை எழும்பூ ரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும். மறு மார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத் திற்கு மாலை 4.30 மணிக்கு புறப்படும் நாகர்கோ வில்-தாம்பரம்(வண்டி எண்.22658) ரயிலானது இன்று, நாளை மற்றும் 25,29,30 ஆம் தேதிகளில்  சென்னை தாம்பரத்திற்கு பதில் எழும்பூரில் சென்று நிற்கும்.