ஆப்கனில் நிலநடுக்கம்
காபூல், பிப்.26- ஆப்கானிஸ்தானில் ஞாயிறன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட் டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. பைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோமீட்டர் தொலைவில் 180 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. பப்புவா நியூகினியாலும்... ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா அருகிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி யிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத் தின்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங் கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
மகாராஷ்டிரா இடைத்தேர்தல் 2 தொகுதிகளிலும் மந்தமான வாக்குப்பதிவு
புனே, பிப். 26 - மகாராஷ்டிரா மாநிலம் கஸ்பா தொகுதியின் எம்எல்ஏ முக்தா திலக் (பாஜக), சின்ச்வாட் தொகுதியின் எம்எல்ஏ லக்ஷ்மண் ஜக்தாப் ஆகி யோர் இறந்ததால் இரண்டு சட்டப்பேர வைத் தொகுதிகளுக்கும் ஜனவரி மாதம் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஞாயிறன்று (பிப்., 26) வாக்குப்பதிவு நடைபெற்றது. புனே நகரில் உள்ள கஸ்பா பெத் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (யுபிடி) கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகரும், பாஜகவின் ஹேமந்த் ரசானேவும், சின்ச்வாட் தொகுதியில் மகா விகாஸ் அகாதி கூட்டணி சார்பில் தேசியவாத காங்கிரஸின் நானா கேட்டும், பாஜகவின் அஷ்வினி ஜக்தாப் களமிறங்கினர். கஸ்பா தொகுதியில் 2,75,428 வாக்காளர்களும், சின்ச்வாட் தொகுதி யில் 5,68,954 வாக்காளர்களும் உள்ள நிலையில், ஞாயிறன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரு தொகுதிகளிலும் தொடக்கம் முதலே மந்தமாக வாக்குப்பதிவு சதவீதம் பதிவாகியிருந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி கஸ்பா பெத்தில் 45.25% வாக்குகளும், சின்ச்வாட்டில் 41.1% வாக்குகளும் பதிவாகின.
முதல்வர் பிறந்தநாள் புகைப்பட கண்காட்சி திறந்து வைக்க கமல்ஹாசனுக்கு அழைப்பு
சென்னை, பிப்.26- முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி பிப்ரவரி 28 அன்று சென்னையில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை அமைச்சர் சேகர்பாபு ஞாயிறன்று கமல்ஹாசனிடம் நேரில் வழங்கினார். ஆழ்வார்பேட்டை யில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது மேயர் பிரியா உடனிருந்தார்.
சேலம் அருகே லாரி மோதி 4 பேர் பலி
சேலம், பிப்.26- சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே தறி கெட்டு ஓடிய லாரி சாலையோரம் சென்ற இருசக்கர வாக னங்களில் அடுத்தடுத்து மோதியதால் 4 பேர் உடல் நசுங்கி பலியாகினர். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் இருந்து தேங் காய் பாரம் ஏற்றிய லாரி ஒன்று தாரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை அரியலூர் பகு தியைச் சேர்ந்த காட்டுராஜா என்பவர் ஓட்டிச் சென்றார். லாரி செலவடை என்ற கிராமத்தை கடந்த போது தாறுமாறாக சென்று சாலையோரம் சென்ற மூன்று இரு சக்கரவாகனங்கள் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த பாலகிருஷ்ணன், சந்தோஷ், சாந்தி, ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்தி லேயே உடல் சிதைந்து பலியாகினர். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். விபத்து குறித்தறிந்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய சரக்கு லாரி ஓட்டுநர் காட்டு ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லாரி ஓட்டுநர் காட்டுராஜா மது போதையில் இருந்ததால், லாரி தறிகெட்டு ஓடி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஓட்டுநர் காட்டுராஜாமீது கொலை வழக்கிற்கு இணையான விபத்து வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
‘வந்தே பாரத்’ ரயில் மீது கற்கள் வீச்சு
பெங்களூரு, பிப்.26- கர்நாடக மாநிலம் மைசூ ருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ‘வந்தே பாரத்’ ரயில் மீது கற்கள் வீசப்பட்டதில் அந்த ரயிலின் ஜன்னல்கள் சேதம் அடைந் தன. இந்த விபத்தில் பயணி கள் யாருக்கும் காயம் ஏற் படவில்லை என தென்மேற்கு ரயில்வே தகவல் தெரி வித்துள்ளது. கிருஷ்ண ராஜபுரம்- பெங்களூரு கண்டோண்ட்மெண்ட் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடைபெற்ற தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புதுச்சேரி: துணை ஜனாதிபதி வருகை திடீர் ரத்து
புதுச்சேரி, பிப்.26- புதுச்சேரி பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா பிப்ர வரி 28 அன்று நடத்த பல்க லைக்கழக நிர்வாகம் திட்ட மிட்டிருந்தது. விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங் களை வழங்குவதாக அறி விக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்க ரின் புதுச்சேரி வருகை திடீ ரென ரத்து செய்யப்பட்டுள் ளது. நிர்வாக பிரச்சனை கள் காரணமாக அவர் வர வில்லை என்று கூறப்படு கிறது. இதற்கிடையே திட்ட மிட்டபடி அதே நாளில் பட்ட மளிப்பு விழாவினை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வரு கிறது.
பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி பைகளை பயன்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்
புதுதில்லி, பிப்.26- பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் மன தின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாடி வருகிறார். இந்நிலையில், (பிப்.26) ஞாயிறன்று 98-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இசை மற்றும் கலைத்துறையில் வளர்ந்து வரும் திறமையான கலைஞர்களுக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரங்கார் வழங்கப்பட்டுள்ளது. இதில் வி.துர்கா தேவி பண்டைய நடனமான கரகாட்டத்துக்காக வென்றுள்ளார். டிஜிட்டல் இந்தியாவின் சக்தியை ஒவ்வொரு வீட் டிற்கும் எடுத்து செல்வதில் பல்வேறு செயலிகள் பெரும் பங்குவகிக்கின்றன. அது போன்ற ஒரு செயலி இ-சஞ் சீவனி. சுகாதாரத்துறையின் இ-சஞ்சீவனி திட்டம், டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. இத்திட்டம் மூலம் இதுவரை 10 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். ஏழை மக்களுக்கு உயிர் காக்கும் செயலியாக இ-சஞ்சீவனி மாறி உள்ளது. மக்கள் உறுதி யாக இருந்தால் இந்தியாவை நிச்சயம் தூய்மைப்படுத்த முடியும். ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் பைகளை மாற்றி துணி பைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பை களுக்கு பொதுமக்கள் (பை...பை) சொல்ல வேண்டும். மக்களின் இந்த முயற்சி எவ்வளவு திருப்தி தரும் என்பதை ஒவ்வொருவரும் உணரும் காலம் வரும்’’ என்று பேசினார்.
முட்டைகோஸ் கொள்முதல் விலை குறைந்தது விவசாயிகள் வேதனை
ஈரோடு, பிப்.26- ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் ஒரு கிலோ முட்டைகோஸின் கொள்முதல் விலை இரண்டு ரூபா யாக குறைந்ததால் கடுமையான நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விவசாயிகளிடம் இருந்து 2 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் முட்டைகோஸ் வெளிமார்க்கெட்டில் 10 முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாஜகவிலிருந்து அருணாச்சலம் விலகல்
சென்னை,பிப்.26- பாஜகவில் இருந்து விலகிய அருணாச்சலம் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை யிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி யின் தலைவர் கமல்ஹாசன் தலைமை யில் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.பாஜகவில் இருந்து விலகி மீண்டும்மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த அருணாச்சலத்திற்கு பொதுச்செய லாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
கண்மாயில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
சிவகாசி, பிப்.26- சிவகாசி அருகே உள்ளது திருத்தங் கல். இங்கு பெரியகுளம் கண்மாய் உள்ளது. இதில் குளிப்பதற்கு 11 ஆம் வகுப்பு படித்து வந்த யோசேபு, கார்த் திக் ஆகிய இரு மாணவர்கள் சென்றுள் ளனர். இந்நிலையில், ஆழம் அதிகமான பகுதிக்கு சென்றதால் இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதை யடுத்து, இருவரின் உடலையும் மீட்டு கூராய்வுக்கு அனுப்பி வைத்த போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரிடம் சிபிசிஐடி காவல்துறை தீவிர விசாரணை
விழுப்புரம்,பிப்.26- விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி அருகே உள்ள குண்டலப்புலி யூரில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமம் மீது பல்வேறு சர்ச்சையான புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து காவல்துறை யினர் சோதனை நடத்தினர். அப்போது ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த மன நலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் காணா மல் போனது போன்ற தகவல்கள் வெளி யானது. இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணி யாளர்கள் 7 பேர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்ட ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஆசிரம பணியாளர்கள் உள்பட 8 பேரையும 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் சிபிசிஐடி காவ லர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி புஷ்பராணி 8 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்தார். இதனை தொடர்ந்து 8 பேரையும் அழைத்து சென்ற சிபிசிஐடி காவலர்கள் ரகசிய இடத்தில் வைத்து தனித்தனி யாக விசாரணை நடத்தி வரு கிறார்கள். இதற்கிடையே அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்த 143 பேர் மற்றும் கோட்டக்குப்பத்தில் இயங்கி வந்த கிளை ஆசிரமத்தில் இருந்த 25 பேர் என 177 பேரை அதிகாரிகள் மீட்டு பல்வேறு ஆசிரமங்களுக்கு அனுப்பி வைத்த னர். அவர்களிடமும் சிபிசிஐடி காவ லர்கள் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
கொல்லிமலையில் மலையேறும் பயிற்சிக்கு தடை
நாமக்கல், பிப்.26- நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கோடைக்காலம் முடியும் வரை, மலையேற்ற பயிற் சிக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. இது குறித்து நாமக்கல் வனச்சரகர் பெருமாள் கூறு கையில், கொல்லிமலையில் காரவள்ளி ஏணிக்கல் தடம், புளியங்சோலை, எரு மப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி அடுத்த பழனியப்பர் கோவில் பகுதி களில் மலையேற்ற பயிற் சிக்கான பாதைகள் உள் ளன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்ப தால் வனப்பகுதியில், காட் டுத்தீ பரவும் அபாயம் உள் ளது. மலையேற்ற பயிற்சி யில் ஈடுபடுபவர்களின் பாது காப்பை கருத்தில் கொண்டு, 3 மாதத்துக்கு மலையேறும் பயிற்சிக்கு தடை விதிக்கப் பட்டு உள்ளது. தொடர்ந்து மலைப்பகுதியில் கண்கா ணிப்பு தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. வனத்துறை யினர் அனுமதியின்றி மலை யேற்ற பயிற்சியில் ஈடுபட் டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரி வித்துள்ளார்.