திரிபுரா மாநிலத்தில் பாக்சாநகர் மற்றும் தன்பூர் ஆகிய இரு இடங்களிலும் செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பாஜக மாநில அரசாங்கத்தின் நேரடி மேற்பார்வை யின் கீழ் முழுமையாக தேர்தல் மோசடிகள் நடந்துள்ளன. அசாதாரண அராஜக சூழ்நிலை உரு வாக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வாக்குச்சாவடி முகவர்கள் தாக்கப்பட்டிருக்கின்ற னர். மற்றும் அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு அராஜகங்களையும் மீறி பாக்சாநகரில் 16 வாக்குச் சாவடி முகவர்களும், தன்பூரில் 19 வாக்குச்சாவடி முகவர்களும் வாக்குச் சாவடிக்குள் எப்படியோ நுழைந்துவிட்டனர். ஆனால், அவர்கள் விரைவில் மிரட்டப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டுள்ள னர். இந்த இடைத் தேர்தல்கள் இவ்வாறு ஜனநாயக நடைமுறையின் கேலிக்கூத்தாகி இருக்கின்றன. தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தல்களை ரத்துசெய்துவிட்டு, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை களுடன் புதிதாக தேர்தலை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கேட்டுக்கொள்கிறது. ‘சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த வேண்டும்’ என்ற தேர்தல் ஆணையத்தின் ஆணையை இப்படி அப்பட்டமாக மீறுவதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து அதிகாரிகளையும் புதிய தேர்தலின்போது பணியில் ஈடுபடுத்தக்கூடாது. இத்தகைய அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, தண்டித்திட வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை