states

img

மணிப்பூர் எம்.பி.க்களை பேச விடாத பாஜக!

நாடாளுமன்றத்தில் நம்  பிக்கையில்லாத் தீர்மா னத்தின் மீதான விவா தத்தில் மணிப்பூர் எம்.பி.க்களை பேச  விடாமல், ஒன்றிய பாஜக அரசு தடுத்  ததாக காங்கிரஸ் மக்களவைக்குழு துணைத்தலைவர் கவுரவ் கோகோய் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்  மற்றும் நாகா மக்கள் முன்னணியின் லோர்ஹோ எஸ்.போஸ் ஆகியோரை, நாடாளுமன்றத்தில் பேச விடாமல் பாஜக தடுத்ததாக கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு நாகா மக்கள் முன்னணி (NPF) எம்.பி. லோர்ஹோ எஸ். போஸ் பேட்டி அளித்துள்ளார். அதில், “ஒன்றிய பாஜக அர சுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை யில்லா தீர்மானம் மீதான விவா தத்தில் நான் பேச விரும்பினேன். ஆனால், நான் பேச வேண்டாம் என்று  பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக பாஜக இதை வலியுறுத்தி யது.  உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் விவகாரம் குறித்து நிறைய பேச இருப்பதாகவும் அதனால்,  நான் பேச வேண்டாம் என்றும் பாஜக எம்.பிக்கள் அறிவுறுத்தினார்கள். நான் சபாநாயகரிடம் இதுகுறித்து எதுவும் கேட்கவில்லை. ஏனெனில், நான் இதை கோரினாலும் எனக்கு  வாய்ப்பு மறுக்கப்படும் என்று அறிந்து இருந்தேன். மணிப்பூரைச் சேர்ந்த மற்றொரு எம்.பி.யான பாஜக-வைச்  சேர்ந்த ஆர்.கே ரஞ்சன் சிங்கிடம் இவ்விவகாரம் குறித்து நான் கேட் டேன். அவரிடமும் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கி றது” என்று பாஜக அரசின் தில்லா லங்கடி வேலைகளை போட்டு உடைத் துள்ளார்.