உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட 14 எதிர்க்கட்சிகள்!
விசாரணை முகமைகளை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் பாஜக
புதுதில்லி, மார்ச் 24 - ஒன்றிய பாஜக அரசானது, சிபிஐ, அமலாக்கத்துறை, என்ஐஏ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்து வதாகக் கூறி 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுவில், சிபிஐ, அமலாக்கத் துறை, போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள், பாஜக-வுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை மட்டும் குறிவைத்து செயல்படுவதாகவும், பாஜக-வில் இணையும் தலைவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படுகிறது அல்லது முடித்துவைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், புல னாய்வு அமைப்புகளின் கைது நட வடிக்கைக்கு முந்தைய மற்றும் பிந்தைய நடவடிக்கைகளின் வழிகாட்டுதல்களையும் கேட்டுள்ளன.
ஜி 20 நாடுகளின் நிதி கட்டமைப்பு மாநாடு தொடங்கியது
சென்னை, மார்ச் 24- 2023 ஆம் ஆண்டுக் கான ஜி 20 நாடுகளின் கூட்ட மைப்புக்கு இந்தியா தலைமை பொறுப்பேற் றுள்ளது. இந்த கூட்ட மைப்பில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, கனடா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரேசில், அர்ஜெண்டினா, இந்தோனேஷியா, தென் கொரியா,மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்று உள்ளன. உலகின் மிகச்சக்தி வாய்ந்த கூட்டமைப்பாக இருக்கும் ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் கல்வி, நிதி, பொருளாதாரம், உணவு, எரிபொருள், சுற்றுச்சூழல் மேம்பாடு, பருவநிலை மாற் றம், பன்னாட்டு நல்லுறவு உள்பட பல்வேறு தலைப்பு களில் விவாதத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இந்தியா வில் உள்ள முக்கிய நக ரங்களில் ஜி 20 நாடு களின் பிரதிநிதிகள் இந்த விவாதங்களில் ஈடு பட்டு வருகிறார்கள்.சென்னையில் கடந்த ஜன வரியில் கல்வி சம்பந்தமான மாநாடு நடந்தது. இதன் தொடர்ச்சி யாக வெள்ளி,சனிக்கிழ மைகளில் சென்னையில் நிதி கட்டமைப்பு தொடர்பான மாநாடு நடைபெற்றது. சென்னை கிண்டியிலுள்ள தனியார் ஓட்டலில் நடை பெற்ற இந்த மாநாட்டில் இந்தியா உள்பட ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டுக்கு ஒன்றிய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் இங்கிலாந்து நிதித் துறையின் தலைமை பொரு ளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 80-க்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் கலந்து கொண்ட னர். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பின்தங்கிய பகுதிகளிலும் தொழிற்பேட்டைகள் தொடங்கப்படும்
சட்டப்பேரவையில் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை, மார்ச் 24- தமிழ்நாட்டில் பின்தங்கியுள்ள பகுதிகளில் வேலைவாய்ப்பை உரு வாக்கும் விதமாக தொழிற்பேட்டை களை அரசு தொடங்கும் என சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் தேன்மொழி, “நிலக் கோட்டை பகுதியில் பித்தளைப் பாத்திர தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் அமைக்க முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், 1959 ஆம் தொடங்கப்பட்ட சங்கம் நான்கு ஆண்டுகளாக உறுப்பினர் வயது மூப்பின் காரணமாக செயல் படாமல் இருக்கிறது. புதிதாக உறுப் பினர்களை சேர்த்து சங்கத்தை மேம்படுத்தி செயல்படுத்தப்படும் என்பதால் புதிய கூட்டுறவு சங்கம் அமைக்க அவசியமில்லை. மேலும், தமிழ்நாட் டின் பின்தங்கிய பகுதிகளில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக தொழிற்பேட்டைகளை அரசு அமைக்கும்” என்றார்.