மோடி அரசு ஒவ்வொரு தேர்தலின் போதும் வேலைவாய்ப்பு மற்றும் வறுமை குறித்த உண்மை தகவல்களை குழி தோண்டி புதைத்து, பசு மற்றும் மதத்தின் பெயர்களில் மட்டுமே வாக்கு சேகரிக்கிறது. இவ்வளவு தான் பாஜகவின் அரசியல். - காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட்
பாஜக அரசியல் சாசனத்துடன் விளையாடி வருகின்றது. அரசியல் ஆதாயத்திற்காக எந்த நிலைக்கும் செல்ல அக்கட்சி தயாராக இருக்கிறது. தனது சொந்த நலனுக்காக மகா ராஷ்டிராவை பாஜக அரசு இப்பொழுதும் சூறை யாடி வருகிறது. இதனை மகாராஷ்டிரா மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.-- சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் அரவிந்த் சாவந்த்
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் என்பது பாஜகவிற்கு எதிரான போராட்டம் மட்டுமின்றி, ஜனநாயகத்தை காக்கும் போராட்டம் ஆகும். பாஜக செய்வது எல்லாமே மறைமுகமாகவே உள்ளது. அதனால் “கண்ணுக்குத் தெரியாத சக்தியாக” உள்ள பாஜகவிற்கும் - மகாராஷ்டிராவிற்கும் எதிரான போட்டியாக சட்டமன்ற தேர்தலை நான் கருதுகிறேன். - தேசியவாத காங்கிரஸ் (சரத்) மூத்த தலைவர் சுப்ரியா சுலே
செபி தலைவர் மாதவி நாடாளுமன்ற விசாரணைக் குழுவை சந்திக்காமல் காலம் தாழ்த்துவதற்கு ஒரே ஒரு காரணம்தான் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர் அதானியை கை காட்டுவார். அதானி கை காட்டப்பட்டால், பாஜக அரசாங்கத்தின் ஊழல் வெட்ட வெளிச்சமாகி விடும். -- திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா