states

பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி : இரா.முத்தரசன்

சென்னை, ஆக. 7- பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தர சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது: காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல்காந்தியின் நாடாளு மன்ற உறுப்பினர் தகுதி நீக்கத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 4) இடைக் கால தடைவிதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் நாடாளு மன்ற உறுப்பினராக செயல்பட அனு மதிக்க வேண்டும் என நாடு முழு வதும் கோரிக்கை எழுந்தது. இதன டிப்படையில் ராகுல்காந்தி மீண்டும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக செயல்படலாம் என மக்களவைச் செயலகம் திங்களன்று (ஆக. 7) அறிவித்திருக்கிறது. ராகுல் காந்தி மீதான குற்றச் சாட்டை விசாரித்த சூரத் பெருநகர நீதித்துறை நடுவர்மன்றம் மார்ச் 23ஆம் தேதி வழங்கிய தண்டனை அதீதமானது என்பதையும் இந்த தீர்ப்பை எதிர்த்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர்நீதி மன்றத்தில் ராகுல் காந்தி செய்து கொண்ட மேல்முறையீட்டு மனு விற்கு நேர்மையான முறையில் நியாயம் வழங்கப்படவில்லை என்றும் கருத்துகள் வெளியாகி யிருப்பது பாஜக ஒன்றிய அரசின்  பழிவாங்கும் அரசியலின் வன் மத்தை வெளிப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தடை மூலம் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. வெறுப்பு  அரசியல் படுதோல்வி அடைந்துள் ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.