states

பிரதமர் மோடிக்கு நெருக்கமான ராஜீவ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக நியமனம்!

புதுதில்லி, மே 12- பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரும், நிதித்துறை செயலாளராக இருந்த நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கான திட் டத்தை வடித்துக் கொடுத்தவருமான ராஜீவ் குமார், மத்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். இந்தியத் தலைமை தேர்தல் ஆணையாளராக பதவி வகித்து வரும் சுஷில் சந்திராவின் பதவிக் காலம் மே 14-ஆம் தேதியுடன் நிறை வடையும் நிலையில், புதிய தலை மைத் தேர்தல் ஆணையராக 63 வய தாகும் ராஜீவ் குமார் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 15) பத வியேற்க உள்ளார். இதற்கான உத்த ரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி யான ராஜீவ் குமார் 1984 ஆம் ஆண்  டில் பீகார்-ஜார்க்கண்ட் பிரிவில் ஐ.ஏ.எஸ். பயிற்சியை நிறைவு செய்த வர். உயிரியல் மற்றும் சட்டம் ஆகிய 2 இளங்கலை பட்டங்களை பெற்ற வர். ‘பொதுக் கொள்கை மற்றும் நிலையான தன்மை’ என்ற துறை யில் முதுகலைப் பட்டமும் பெற்ற வர். ரிசர்வ் வங்கி (RBI), நபார்டு  (NABARD) இயக்குநர், பொருளா தார புலனாய்வு கவுன்சில் (EIC), நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் (FSDC), வங்கி வாரிய பணியகம் (BBB); நிதித் துறை ஒழுங்குமுறை நியமனங்கள் தேடல் குழு (FSRASC), சிவில் சர்வீசஸ் வாரி யம் போன்றவற்றில் 37 ஆண்டு களுக்கும் மேலாக பணியாற்றி யவர்.

பிரதமர் நரேந்திரமோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியான இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு ஒன்  றிய அரசின் நிதித்துறை செயலா ளராக நியமிக்கப்பட்டார். அந்த  இரண்டரை ஆண்டு பதவியின் போதுதான் வங்கி ஊழியர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி பொதுத் துறை வங்கிகள் இணைக்கும் திட்டங்களை ராஜீவ் குமார் முன்னின்று செயல்படுத்தினார். அதேபோல் நஷ்டத்தில் இயங்கு வதாக கூறி, ஐ.டி.பி.ஐ. வங்கியை விற்பனை செய்யும் திட்டத்தையும் ராஜீவ் குமார்தான் அறிமுகம் செய்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி-யை தனியார்மயமாக்கும் திட்டத்தை வடிவமைத்ததும் ராஜீவ் குமார்தான். முன்னதாக, ரிசர்வ் வங்கி ஆளு நர் உர்ஜித் பட்டேலுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே மோதல் ஏற் பட்டதிலும் ராஜீவ் குமாரின் பெயர்  வலுவாக அடிபட்டது. இவ்வாறு நரேந்திர மோடி அரசுக்கு மிகவும் நெருக்கமான ராஜீவ் குமார், உச்ச  நீதிமன்றம் போன்ற நாட்டின் தன் னாட்சி அமைப்புகளில் ஒன்றான தேர் தல் ஆணையத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.