சென்னை, செப்.5- ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதி மன்றத்தில், வழக்கறிஞர் ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ ஜெய லலிதா மரணம் குறித்து விசாரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது. ஆறுமுகசாமி ஆணை யம், தனது அறிக்கையை 2022 ஆம் ஆண்டு அக்டோ பர் 17ல், சமர்ப்பித்துள்ளதாக அரசாணை வெளியிடப் பட்டது. ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையம் அமைக்கப் பட்டு ரூ. 6 கோடி செலவிடப் பட்டது, 5 ஆண்டுகளுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆணையத்தின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு அதி காரிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு அமைக்கப்பட்ட ஆணையம் அளித்த பரிந்துரைகள் படி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பொது மக்களும், அதிமுகவினரும் காத்திருக்கும் நிலையில், அந்த அறிக்கையை அரசு கிடப்பில் போட்டுள்ளது. எனவே, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யின் படி நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசிடம் ஜூலை 9 ஆம் தேதி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசார ணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தாரரின் கோரிக்கையை பரிசீ லித்து முடிவெடுக்க தமிழ் நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.