பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் நியமனம்!
சென்னை, நவ. 17 - தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வீ. பாரதிதாசன் நிய மனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில், உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராகப் பணி யாற்றிய ஓய்வுபெற்ற நீதிபதி எம். தணிகாசலம் மற்றும் உறுப்பினர்கள், தங்களது பதவி விலகல் கடிதங்களை அரசுக்குச் சமர்ப்பித்துள்ள னர். அவர்களது பதவி வில கலை ஏற்று, தமிழ்நாடு பிற் படுத்தப்பட்டோர் ஆணை யத்தின் தலைவராக சென் னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வீ. பாரதி தாசன் மற்றும் உறுப்பினர் களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது. பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கள் ச.கருத்தையா பாண்டி யன், மு. ஜெயராமன், இரா. சுடலைக்கண்னன், கே. மேக்ராஜ் மற்றும் முனை வர்கள் மதியழகன், சர வணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சவுக்கு சங்கருக்கு 4 வழக்குகளில் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்!
சென்னை, நவ. 17 - நீதித்துறையை விமர்சனம் செய்ததாக, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து செப்டம்பர் 15-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், சிறைத்தண்டனையை ரத்து செய்ய வேண்டு மென வலியுறுத்தி சவுக்கு சங்கர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.கே. மகேஸ்வரி அடங்கிய அமர்வு நவம்பர் 11-ஆம் தேதி விசாரித்தது. அப்போது, சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், சிறையில் இருந்து வெளியே வந்தபின் அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். இதையடுத்து சவுக்கு சங்கர் விடுதலையாவார் என்று கருதப்பட்ட நிலை யில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் பிரிவு காவல்துறை கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் சவுக்கு சங்கரை மீண்டும் நவம்பர் 11-ஆம் தேதி கைது செய்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் வியாழனன்று ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் வழக்கு குறித்து வெளியில் எங்கும் பேசக்கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ளது.
கனமழையையும் பொருட்படுத்தாமல் சபரிமலையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை, நவ.17- சபரிமலையில் மண்டல மகரவிளக்கு உற்சவத்துக் காக நடை திறக்கப்பட்ட முதல் நாளில் பக்தர்களுடன் கனமழையும் பெய்தது. புத னன்று (நவ.16) மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை இரவு 8 மணியளவில் ஓய்ந்தது. பெருவழியை நிரப்பிய பக்தர்களின் ஓட்ட த்தை மழையால் தடுத்து நிறுத்த முடியவில்லை. பக்தர்கள் வரிசையில் நின்று மழையையும் பொருட் படுத்தாமல் 18 ஆம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தனர். பம்பை முதல் சன்னி தானம் வரையிலான சரண பாதையில் உள்ள வரிசை வளாகங்கள் நெரிசலின்றி செல்ல பக்தர்களுக்கு உத வின. 18 படிகளில் பக்தர் களுக்கு உதவியாக நின்றி ருந்த காவல்துறையினருக் கும் மழையால் சிரமம் ஏற்பட்டது. பெரிய நடை பாதையில் கற்கள் பதித்து, கால்வாய்கள் வழியாக தண்ணீர் வெளியேற ஏற்பாடு செய்திருப்பது ஆறுதலாக இருந்தது. கனமழையை பொருட்படுத்தாமல் பம்பை யில் இருந்து சன்னி தானத்திற்கு பக்தர்கள் வருகை தொடர்ந்தது. புத னன்று மட்டும் பத்தா யிரத்திற்கும் மேற்பட்டோர் சன்னிதானம் வந்தனர்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு நேபாளம் அழைப்பு!
நேபாளத்தில் நவம்பர் 20 அன்று நாடாளுமன்றம் மற்றும் மாகாணத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. 275 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், ஏழு மாகாண சட்டசபைகளில் 550 உறுப்பினர் இடங்களையும் தேர்ந்தெடுப்பதற்கு இந்தத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்நிலை யில், நேபாளத்தின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சட்டமன்றங்களுக்கு நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கான சர்வதேச பார்வையாளராக வருமாறு இந்திய தலைமைத் தேர்தல் ஆணை யர் ராஜீவ் குமாருக்கு நேபாள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை ஏற்று, நவம்பர் 18 முதல் 22 வரை ராஜீவ் குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய குழு நேபாளத்தில் பயணம் மேற்கொள்கிறது.
தேர்தல் வெற்றி சமூக ஊடக நிறுவனங்களின் கைக்கு போய்விட்டது
“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருந்தாலும், சமூக ஊடகங்கள் மூலம் இந்திய தேர்தல்கள் மோசடி செய்யப்படலாம். பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் விரும்பினால், எந்த கட்சியையும் தேர்தலில் வெற்றி பெறச் செய்யலாம். முறையான சார்பு அங்கு பயன்படுத்தப்படுகிறது. எனது சமூக ஊடக கையாளுதல்களே அதற்கு நேரடி உதா ரணம். ஒரு சித்தாந்தம் மற்றும் அதன் தலைவர்களால் சமூகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்க வகுப்புவாத வன்முறை ஒரு மூலோபாய ஆயுதமாக விதைக்கப்பட்டுள்ளது” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தில்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஜாமீன் மனு தள்ளுபடி!
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை, ரூ. 1 கோடியே 62 லட்சம் ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், அமலாக்கத் துறை, கடந்த மே மாதம் கைது செய்தது. இவ்வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி சத்யேந்திர ஜெயின் தில்லி ரோஸ் அவென்யூ நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி விகாஸ் துல் முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சத்யேந்திர ஜெயின் மற்றும் இருவரின் ஜாமீன் கோரும் மனுக்களை தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சிவன் பேசிய மொழி தமிழ்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் டுவீட்
உ.பி. மாநிலம், வாரணாசியில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி குறித்து, அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் டுவிட்டரில் தமிழில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான். சிவனின் திருவாயில் இருந்து வெளியான மொழி தமிழ். இது சமஸ்கிருதத்திற்கு இணையானது. தமிழ் மக்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வு, பிரதமரின் ‘ஏக் பாரத்-ஷ்ரேஷ்டா பாரத்’ உறுதிமொழிக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும். இந்தியா வின் கலாச்சார நாகரிகத்தில் ‘ராம சேது’ போலவே இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பெருமை மிக்க மரபுகளை நொறுக்குகிறார் பிரதமர் மோடி!
“இதற்கு முன்னர் நமது பிரதமர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் உள்நாட்டு அரசியல், பாரபட்சம் மற்றும் தவறான எண்ணங்களை பேசியதில்லை என்பது நீண்ட கால நமது பாரம்பரியம் ஆகும். இந்த ஆரோக்கியமான பாரம்பரியம், 2014 மே மாதத்துக்கு பிறகு (மோடி ஆட்சிக்கு பிறகு) உடைக்கப்பட்டு விட்டது. இதற்கு சமீபத்திய உதாரணமாக இந்தோனேசியாவில் மீண்டும் அவர் (பிரதமர் மோடி) தனது சுய ஆவேசத்தைக் காட்டி உள்ளார்” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.
ரயில்வே கள அலுவலர், மேற்பார்வையாளர்க்கு ஊதிய தர உயர்வு
“ரயில்வே துறை ஊழியர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து முடிவு எடுத்துள்ளது. அதன்படி இத்துறையில் 7,8,9 ஆகிய நிலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்குரிய பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. அவர்கள் ‘குரூப் ஏ’ பிரிவு ஊழியர்களுக்கு இணை யாக நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நிதி அமைச்சகமும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்மூலம் ரயில்வே ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ. 2,500 முதல் ரூ.4 ஆயிரம் வரை கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்கும்” என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
கேக்கை வெட்டிய கமல்நாத் மீது நடவடிக்கை: பாஜக கோரிக்கை
காங்கிரஸ் மூத்தத் தலைவர் கமல்நாத், தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவாளர்கள் முன்னிலையில் கோயில் வடிவில் அமைக்கப்பட்ட கேக்-ஐ வெட்டியுள்ளார். அந்த கேக்-கின் மேல், காவிக்கொடியும், அனுமன் புகைப்படமும் இருந்துள்ளது. இதையடுத்து கமல்நாத் இந்துக்களின் உணர்வை அவமதித்து விட்டதாகவும், இது இந்து மதத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் செய்யப்பட்ட இழுக்கு என்றும் ம.பி. மாநில பாஜக உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, செய்தித் தொடர்பாளர் அமித் மால்வியா உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். கமல்நாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
மாடுகள் மீது ரயில் மோதுவதை தடுக்க 1000 கி.மீ. தடுப்பு சுவர்
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில்கள், குஜராத்தில் அடுத்தடுத்த நாட்க ளில் எருமை, பசுக்கள் மீது சேதமடைந்தது. இவை தவிர, இந்தாண்டு மட்டுமே மாடுகள் குறுக்கே வந்ததால், 4 ஆயிரம் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டதாகவும், அதிலும் குறிப்பாக, வடக்கு ரயில்வே, வட மத்திய ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில்தான் இதுபோன்ற விபத்துக்கள் நடப்ப தாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், “மாடுகள் தண்டவாளத்தில் புகுந்து விபத்து ஏற்படுவதை தடுக்க 1000 கி.மீ. தூரத்திற்கு தடுப்புச் சுவர்கள் கட்டப்படும்’’ என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நகைக் கடைத் திருட்டில் சிக்கிய ஒன்றிய உள்துறை இணையமைச்சர்
நாட்டையே பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசின் உள்துறைக்கு இணையமைச்சராக இருப்ப வர் நிஷித் பிராமணிக். இவர், சுமார் 13 ஆண்டுகளுக்கு 2009-ஆம் ஆண்டு அலி புர்தார் ரயில் நிலையம் மற்றும் பீர்பாரா அருகே உள்ள நகைக்கடைகளில் திருட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில், மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவார் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. நிஷித் பிராமணிக் முன்னதாக திரிணாமுல் காங்கிரசில் இருந்தவர் ஆவார். 2019-ஆம் ஆண்டில் பாஜக-வுக்கு தாவினார். அங்கு எம்.பி. ஆனதுடன், ஒன்றிய உள்துறை இணையமைச்சராகவும் உயர்த்தப்பட்டுள்ளார்.
டிசம்பர் 19 முதல் கர்நாடக குளிர்காலக் கூட்டத் தொடர்
கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 19-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
செந்தில் பாலாஜி குறித்து அவதூறு: பாஜக நிர்வாகிக்கு தடை
சென்னை, நவ. 17- தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்து களை வெளியிட தமிழக பாஜக நிர்வாகிக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மின்சாரம் மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் ட்விட்டரில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும் தமிழ கத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியை நிர்மல் குமார் விமர்சித் திருந்தார். இந்நிலையில் தன்னை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் வில்சன், அவதூறு பேச்சு குறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அமைச்சர் குறித்து நிர்மல்குமார் அவதூறாக பேசிவருவதாக கூறினார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதித்த நீதிபதி, மனு குறித்து நிர்மல் குமார் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
விரைவில் திருத்தப்பட்ட மின்சார வாகனக் கொள்கை
சென்னை, நவ. 17- காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் 10 கிராமங்களை தேர்வு செய்து ‘காலநிலை ஸ்மார்ட் கிராமங்கள்’ ஆக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் ‘தமிழ்நாடு மின்துறை, வளங்குன்றா வளர்ச்சி பாதைகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் திட்டங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர் பேசுகையில், தமிழக அரசின் திருத்தப் பட்ட மின்சார வாகனக் கொள்கை விரை வில் வெளியாகும் என்று தெரிவித்தார். கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு பேசுகையில், தமிழ்நாடு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கீழ்நிலையில் இருந்து பணியாற்றி வருகிறது. தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. பசுமை பரப்பளவை அதிகரிக்க தமிழ்நாடு பசுமை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்ட சதுப்பு நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தற்போது வரை 13 சதுப்பு நிலங்கள் ராம்சர் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 சதுப்பு நிலங்களை ராம்சர் நிலங் களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அத்துடன், தமிழகத்தில் 10 கிராமங்களை தேர்வு செய்து காலநிலை ஸ்மார்ட் கிராமங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பள்ளி கல்லூரிகள் நாளை செயல்படும்
சென்னை, நவ.17 தமிழகத்தில் தீபாவளி மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடு முறை அறிவித்தது. இதற்கு பதில் மற்றொரு நாளில் பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாட்களாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் சனிக்கிழமை (நவ.19) அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்து அதிகரித்தால் தனியார் வாகனங்கள் குறையும்: முதல்வர்
சென்னை, நவ. 17- பொதுப் போக்குவரத்து அதிகரித்தால் தனியார் வாகனங்க ளின் எண்ணிக்கையும், போக்கு வரத்து நெரிசலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரி வித்தார். சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழு மத்தின் முதல் கூட்டம் வியாழ னன்று (நவ. 17) தமிழக முதல்வ ரும், குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவ னத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் பேசுகை யில், சென்னை நகரம் போக்கு வரத்து நெரிசல் மிகுந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த துதான். பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத் திற்கும் ஏற்ப நாம் போக்குவரத்து வசதிகளை திட்டமிட்டு பெருக்க வேண்டியுள்ளது. அதற்காக நாம் புதிய தொழில்நுட்பங் களை எந்தளவிற்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். உலகத் தரம் வாய்ந்த போக்கு வரத்து முறை நமது தலைநகரில் அமைய வேண்டும். பொதுப் போக்குவரத்து எந்த அளவிற்கு சிறப்பாக கட்ட மைக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் குறை யும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் அதே அளவுக்குக் குறையும். எனவே, முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்பானது தனது பணி களை ஒருங்கிணைத்து, திட்ட மிட்டு குறிப்பிட்ட கால வரம்பிற் குள் அவற்றை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவ, மாண வியர் சிரமமின்றி சென்று வரும் வகையில், முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதி களில் அவை காலையில் துவங்கி மாலை முடியும் நேரத்தை கருத் தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
போலந்தில் விழுந்தது உக்ரைனின் ஏவுகணை பழியை ரஷ்யா மீது போடும் முயற்சி தோல்வி
நியூயார்க், நவ.17- போலந்து மண்ணின் மீது ஏவப்பட்ட ஏவுகணை உக்ரைனின் ராணுவத்தால் ஏவப்பட்டது என்று அம்பலமாகியுள்ளதால் உக்ரைனின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. போலந்தின் மீது ஏவுகணை ஏவப்பட்டதால் சர்வதேச சமூகம் அதிர்ச்சிக்குள்ளானது. ரஷ்யாதான் ஏவியது என்று உக்ரைனும், மேற்கத்திய நாடுகளும் செய்தியைப் பரப்பின. பல்வேறு நாடுகளும் ரஷ்யாவைக் கண்டித்தன. உள்நோக்கத்துடன்தான் ரஷ்யா இந்த ஏவுகணைகளை ஏவியது என்று உக்ரைன் அறிக்கைகளை வெளியிட்டது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவும் ரஷ்யாவுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தது. இந்நிலையில், போலந்து மீது ஏவுகணைகளை ஏவியது உக்ரைன்தான் என்பது தெரிய வந்துள்ளது. இதை போலந்து அரசே உறுதிப்படுத்தியிருக்கிறது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யத் தூதுவர் வாசிலி நெபென்சியா பேசுகையில், “ஏவுகணைகளை உக்ரைன்தான் ஏவியுள்ளது. ஆனால் ரஷ்யா ஏவியதாகச் செய்தியைப் பரப்பினார்கள். திட்டமிட்ட வகையில் பொய்ச்செய்தி பரப்பப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கும், நேட்டோவுக்கும் இடையில் நேரடி மோதலை உருவாக்கும் நோக்கத்தில்தான் இதைச் செய்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். போலந்து-உக்ரைன் எல்லையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரிஸ்வோடோ நகரின் மீது விழுந்த இரண்டு ஏவுகணைகளால் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். முதலில் ரஷ்யாதான் ஏவுகணைகளை ஏவியிருக்கும் என்று சொன்ன போலந்து நிர்வாகம், அது உக்ரைனால் ஏவப்பட்டது என்று தெரிந்தவுடன், எந்த வித உள்நோக்கமும் இன்றி ஏவப்பட்டதாகத் தெரிகிறது என்று சமாளித்து வருகிறது.