states

கொரோனா கால ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி

சென்னை, ஜன.2- கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பி ரமணியன் தெரிவித்தார். சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய  அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது:- எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார். 2019  ஆம் ஆண்டில் 2,345  செவிலியர்கள் எம்ஆர்பி  மூலம் தேர்வு செய்யப்பட்ட னர். அதில் 2,323 பேர் பணியில் சேர்ந்தனர்.  2020 ஆம் ஆண்டில் விண்ணப்பித்த 5736 பேரை பணிக்கு அழைத்ததில் 2366 பேர் பணியில் சேர்ந்தனர். அரசின் விகிதாச்சாரம் எதை யும் பின்பற்றாமல் செவிலி யர்களை பணிக்கு சேர்த்தது  அதிமுக அரசு. பொது சுகாதாரத்துறை யில் 2200 காலி பணியிடங் கள் உள்ளன. மக்களை தேடி  மருத்துவத்தில் இடைநிலை சுகாதார சேவைக்காக 270 பேர் தேவை. இது போன்று சுகாதாரத்துறையில் உள்ள காலி பணியிடங்களில் இந்த செவிலியர்கள் நிரப் பப்படுவார்கள். பணி  நீட்டிப்பு வழங்கப்படாத வர்களுக்கு காலிப்பணி யிடங்கள் உள்ள இடத்தில் மாற்றுப்பணி வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றியதால் மாற்றுப் பணி வழங்கப்பட உள்ளது. 14 ஆயிரம் ஊதியம் வாங்கிய நிலையில், இது 18 ஆயிரம் ரூபாயாக உயர உள்ளது. பணி நிரந்தரம் என்பது சாத்தியமில்லை. இதனை செவிலியர்கள் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.