சென்னை, செப். 16 - வன்கொடுமையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு சார்பில் உதவி மையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் 1952ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை சமூகப்பணி கல்லூரியின் பவள விழா (70வது ஆண்டு) சனிக்கிழமையன்று (செப்.16) கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதனை யொட்டி கல்லூரியின் பாரம்பரி யத்தை நினைவுகூரும் வகையில் ‘தி விஸ்டம் ட்ரீ’ சிறப்பு மலரை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பெற்றுக் கொண்டார். இந்த விழாவையொட்டி ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் 2 கோடி ரூபாய் நிதி பங்களிப்போடு ‘சமூக நீதி மற்றும் சமத்துவ மையம்’ தொடங்கப்பட்டது. இந்த மையத்தை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அரசு இத்தகைய மையத்தை தொடங்கி உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டிற்கான சட்டங்கள், திட்டங்கள், கொள்கை களை வகுப்பது, தற்போது உள்ள திட்டங்களை செம்மைப்படுத்துவது, புதிய திட்டங்களை உருவாக்கு வது போன்ற பணிகளுக்கு ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை ஆய்வுப் பூர்வமாக வழங்கும்” என்றார். “அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்போதுதான் சமத்துவம் மலரும். வெளிநாடுகளில் சென்று படிக்கும் மாணவர்களுக்கு துறை யின் சார்பில் 36 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. விதிமுறைகளின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் 10 பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்க முடிந்துள் ளது.
எனவே, விதிமுறைகளை திருத்த உள்ளோம்” என்றும் அவர் கூறினார். “சமத்துவ மயானம் உள்ள கிராமங்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் அரசு வழங்குகிறது. ஆனால் மாவட்டத்திற்கு 3 கிராமங்களில் கூட சமத்துவ மயானங்கள் இல்லை. கிராமப்புறங்களில் வன்கொடு மையால் பாதிக்கப்பட்டவர்கள் எங்கு முறையிடுவது; புகார் அளிப்பது, வழக்கு தொடுப்பது போன்ற விவரங்கள் தெரியாமல் உள்ளனர். ஆகவே, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் உதவி மையம் விரை வில் அமைக்கப்பட உள்ளது. பொரு ளாதார முன்னேற்றத்தோடு, அனை வரின் முன்னேற்றமும் முக்கியமா னது” என்றும் அமைச்சர் கூறினார். கீதாஜீவன் அமைச்சர் கீதா ஜீவன் குறிப்பிடு கையில், கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் கடுமையான அடக்கு முறைக்கு உள்ளாகின்றனர். கை நிறைய சம்பாதிக்கும் பெண்கள் கூட, சம்பளத்தை அப்படியே கொண்டு சென்று கணவனிடம் கொடுக்கும் நிலைதான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். குடும்பத்தில் பேசி செலவை பகிர்ந்து செய்யும் முறை வர வேண்டும். இந்த கல்லூரி நிர்வாகத்தோடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து செயல்படும்” என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் க.லட்சுமி பிரியா, இயக்குநர் முனைவர் ஆனந்த், கல்லூரியின் தலைவர் கே.ஏ.மேத்யூ, செயலாளர் முத்துகுமார் தானு, முதல்வர் எஸ்.ராஜா சாமுவேல், புல முதன்மையர் (டீன்) ஆர்.சுபாஷினி உள்ளிட்டோர் பேசினர்.