புதுதில்லி, மார்ச் 13 - நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமர்வு, திங்களன்று துவங்கிய நிலையில், அதானி விவகாரம் விவாதத்திற்கு வருவதைத் தடுப்பதற்காகவே, மோடி அரசு முந்திக்கொண்டு, ராகுலின் லண்டன்உரையை பிரச்சனையாக்கி நாடாளு மன்றத்தை அமளிக்காடாக மாற்றியது. நாடாளுமன்றத்தின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம், ஜனவரி 31 அன்று துவங்கி பிப்ரவரி 13 வரை 10 நாள் நடைபெற்றது. இந்த முதல் அமர்வில் குடியரசுத் தலைவர் உரையும், பட்ஜெட் தாக்கலும் இடம்பெற்றன. அதானி ஊழல் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தை மோடி அரசு புறக்கணித்தது. இதனிடையே, ஒரு மாத கால விடுமுறைக்கு பின், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டம் திங்களன்று (மார்ச் 13) தொடங்கும் என அறிவிக்கப் பட்டது. ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொட ரில் மொத்தம் 17 நாளில் 35 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டது. இதில், மாநிலங்களவையில் 26, மக்கள வையில் 9 மசோதாக்கள் அடங்கும். இதனடிப்படையில், அவையின் சுமூகமான செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக மாநிலங் களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், ஞாயிறன்று அனைத்துக் கட்சி
மறுபுறத்தில், ஏழைகளுக்கு உதவாத 2023-24 பட்ஜெட் அறிக்கை, சமையல் எரிவாயு விலை உயர்வு, ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அறிக்கை அடிப்படையி லான அதானி குழுமத்தின் ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் கோடி பங்குச் சந்தை ஊழல், எல்ஐசி பங்கு கள் சரிவு, பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைத்து நடத்தப்படும் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத் துறை ரெய்டு, பிபிசி ஆவணப்பட சர்ச்சை உள்ளிட்ட விவகாரங் களைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. தமிழ்நாட்டள வில், நீட் மற்றும் ஆன்லைன் ரம்மி க்கு எதிரான மசோதா விவகாரங் களில் ஆளுநரின் தன்னிச்சைப் போக்கு குறித்த விவகாரங்களைக் கிளப்பவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருந்தன.
ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம்
இந்நிலையில், திங்களன்று மக்களவை கூடியதும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு எதிராக, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரிமை மீறல் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். ராகுல் காந்தி அண்மையில் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் மற்றும் பிரிட்டிஷ் நாடாளு மன்ற கிராண்ட் கமிட்டி அரங்கம் ஆகியவற்றில் உரையாற்றி யிருந்தார். அப்போது, “இந்தியா வில் எம்.பியாக இருப்பது மிகவும் கடினம். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு ஆளுங்கட்சி மதிப்பு அளிப்ப தில்லை. சாமானியர்களின் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்பட்டு வரு கிறது. ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்படுகிறது. நாட்டின் சுதந்திரமான (வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்ற) அமைப்புகளில் ஆர்எஸ்எஸ் பாஜக அமைப்புகள் ஊடுருவி வருகின்றன. எனவே, மீண்டும் சுதந்திரமான பேச்சுரிமை யை வலியுறுத்தி நான் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண் டேன். பாஜகவை யாராலும் வெல்ல முடியாது என ஊடகங்களில் திட்ட மிட்டு ஒரு கருத்து பரப்பப்படு கிறது. ஆனால் நான் மக்கள் சொல்வதையே கேட்கிறேன். சர்வதேச அளவில் இந்தியாவிற்கு முக்கியமான இடமிருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இதற்காகவே ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ராஜ்நாத் சிங் கூறி னார். ராகுல் காந்தியின் விமர்சன ங்களை நாடாளுமன்றம் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், ராகுல் காந்திக்கு எதிரான இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். போட்டியாக, பாஜக எம்.பி.க்கள் ராகுல் காந்தி மன்னி ப்பு கேட்க வலியுறுத்தி முழக்கங் கள் எழுப்பினர். இதனால் அவை யில் கூச்சலும் குழப்பமும் நிலவவே, பிற்பகல் 2 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல மாநிலங்கள வையில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், ராகுல் காந்தியை கண்டி த்து பேசினார். நாட்டு மக்களையும் நாடாளுமன்றத்தையும் ராகுல் காந்தி அவமானப்படுத்தி விட்டதால், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இதற்கு எதிராக அங்கும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தவே, மாநி லங்களவை நடவடிக்கைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டன. பிற்பகல் 2 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடிய போது, ராகுல் காந்தி அவரது லண்டன் பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்களும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பி னர்களும் மீண்டும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இத னால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.