ஹிண்டன்பர்க் நிறுவனத்தை விசாரிக்கக் கோரும் மனு ஏற்பு
அதானி குழுமம் மீது ரூ. 17 லட்சம் 80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி யுள்ள ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனத்தின் நாதன் ஆண்டர்செனை விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ ஆய்வ றிக்கையை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த மனுவை பிப்ரவரி 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஓ.பன்னீர் செல்வத்திற்கு நன்றி கூறும் அண்ணாமலை
“ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தென்ன ரசுவிற்கு ஆதரவு தரப்படும். ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’யின் சார்பில் வேட்பாளரை நிறுத்திய எடப்பாடி பழனிசாமிக்கும் தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ. பன்னீர் செல் வத்திற்கு நன்றி!” என பாஜக தலைவர் கே. அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.
அண்ணாமலை களமாட வராதது ஏன்?: கு.ப.கிருஷ்ணன் கேள்வி
“தேசிய அளவில் காங்கிரஸ் வெர்சஸ் பாஜக என இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஒருவேளை அக்கட்சியை எதிர்த்து பாஜக போட்டியிட்டு வென்றால் அது நாடாளுமன்றத் தேர்தலுக்கு உதவியாக இருந்திருக்கும். மாறாக, ஈரோடு கிழக்குத் தொகுதியில், திமுக வெர்சஸ் பாஜக என வெறுமனே சொல்லிக் கொண்டால் போதுமா, அண்ணாமலை களமாடி பார்த்திருக்க வேண்டும். தமிழ்நாடு திராவிட பூமி. பாஜக எங்களை கட்டுப்படுத்த முடியாது. பிரதமர் மோடியை நாங்கள் மதிக்கிறோம். அதற்காக எங்களை ஏறி மிதிக்க அனுமதிக்க மாட்டோம். நாங்கள் அண்ணாமலைக்கு அடிமைகள் அல்ல!” என்று ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் ஆவேசமாக பேசியுள்ளார்.
ஓபிஎஸ் மகன் ‘தர்ம’ப் பேச்சு
ஈரோடு கிழக்குத் தொகுதியில், எடப்பாடி பழனிசாமி நிறுத்திய கே.எஸ். தென்னரசு, அதிமுக-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகி இருப்பது ஓ. பன்னீர்செல்வம் தரப்பிற்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்நிலையில், “தர்மத்திற்கு சோதனை வரலாம். ஆனால் வீழ்ந்து விடாது என்பது வரலாற்று உண்மை. தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வரை எங்களது முயற்சிகள் தொடரும்” என ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் முகநூலில் பதிவிட்டுள்ளார். மேலும், “தர்மத்தின் வழியில் செயல்படும் தலைவரின் செயல்கள் ஒரு சில மனிதர்களுக்கு தற்காலிகமாக கசப்பு மருந்து போல் தெரியலாம். ஆனால் அதுதான் நிரந்தர சஞ்சீவினி மருந்தாக இருக்கும் என்பதே உண்மை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இந்துத்துவா, மனுவாதம் ஒரு வன்முறை சித்தாந்தம்’
“இந்து மதத்தில் இருந்து ‘இந்துத்துவா’ வேறுப்பட்டது. நானும் ஒரு இந்து, ஆனால் நான் மனுவாதத்திற்கும், இந்துத்துவத்திற்கும் எதிரானவன். அநேகமாக நம்மில் பெரும்பாலோர் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. மாறாக, நாம் இந்துத்துவத்திற்கு எதிரானவர்கள். எந்த மதத்திலாவது கொலை மற்றும் வன்முறைக்கு வாய்ப்பு உள்ளதா? ஆனால், இந்துத்துவா மற்றும் மனுவாதத்தில் கொலை, வன்முறை மற்றும் பிரிவினைக்கான வாய்ப்பு உள்ளது” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசியுள்ளார்.
அதானி விவகாரத்தில் ‘போராளி’ மம்தா அமைதி ஏன்?
“அதானியுடன் மம்தா பானர்ஜிக்கு நல்ல உறவு இருப்பதாக கருதுகிறேன்; பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக மம்தா பானர்ஜி எதுவும் பேசவில்லை. மேற்கு வங்கத்தில் நாங்கள் மம்தா பானர்ஜியை ‘போராளி’ என்று அழைக்கிறோம். ஆனால் இப்போது அவர் அமைதி யாகிவிட்டார்” என்று காங்கிரஸ் மக்களவைக்குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்துள்ளார்.
‘ஆர்எஸ்எஸ் டிஎன்ஏ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது!’
சாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு இந்து மதம் காரணமில்லை என்றும் மத மாற்றங்களைத் தடுக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி யிருப்பது குறித்து, பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் பதிலளித்துள்ளார். அதில், “மோகன் பகவத்தின் கருத்துகளுக்குப் பின்னால் அவர்களின் (ஆர்எஸ்எஸ்) அசல் சிந்தனை உள்ளது. அவர்களின் ஆன்மா, பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரானது. அவர்களின் உட்கரு என்ன என்பது வெளியே வந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
‘அதானியும், மோடியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்’
“பிரதமர் நரேந்திர மோடியும், அதானியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். அதானியால் மற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். பிரதமர் மோடி அதானி குழும ஊழல் விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறார். நாடாளுமன்ற விவாதத்தை தடுக்கிறார். இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை நாங்கள் விரும்புகிறோம்” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை,பிப்.7- சென்னை உயர் நீதிமன்றத் திற்கு கூடுதல் நீதிபதிகளாக நிய மிக்கப்பட்ட 5 பேர் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நிய மனம் செய்ய குடியரசுத் தலைவர் திங்களன்று (பிப்.6) ஒப்புதல் அளித் தார். இதன்படி, வழக்கறிஞர்களான லஷ்மண சந்திர விக்டோரியா கௌரி, பிள்ளைப்பாக்கம் பஹூ குடும்பி பாலாஜி, கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன், நீதித்துறை அதி காரிகளான ராமச்சந்திரன் கலை மதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் சென்னை உயர் நீதி மன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் 5 பேரும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி களாக பதவியேற்கும் நிகழ்ச்சி செவ் வாயன்று (பிப்.7) சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில், பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா 5 பேருக்கும் பதவிப் பிர மாணம் செய்து வைத்தார்.
அரூரில் பருத்தி மூட்டைகளுடன் 2-ம் நாளாக விவசாயிகள் காத்திருப்பு
அரூர்,பிப்.7- தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக இரண்டு இடங்களில் தனித்தனியாக பருத்தி ஏலம் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசா யிகள் இருமையங்களில் நடை பெறும் இடங்களில் பங்கேற்று தங்களது பருத்தி மூட்டைகளை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், திங்களன்று நடை பெற்ற ஏலத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ஒரு கோடி 10 லட்சம் ரூபாய்க்கு பருத்தி மூட்டை கள் ஏலம் போனது. இதில் திருப்பூர், கோவை , திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த வியாபாரிகள் வருகை தந்து பருத்திக்கு விலை நிர்ணயம் செய்து ஏலம் எடுத்தனர். அதேசமயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 150-க்கு மேற்பட்ட விவசாயிகள் கொண்டு வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகள் திங்களன்று ஏலம் போகவில்லை. இதனை பார்வையிட வந்த வியாபாரிகளை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி எடுக் கக் கூடாது என கூட்டுறவு வேளா ண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திலிருந்து அழுத்தம் கொடுத்ததாகவும், இதனால் அங்கு வந்த வியாபாரிகள் பருத்திக்கு விலை நிர்ணயம் செய்யாமல் திரும்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இரவு 8 மணி வரை பருத்தி ஏலம் நடைபெறாததால் ஆத்திர மடைந்த விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். அவர்களுடன் அதிகாரிகள் சமரசம் செய்து வியாபாரிகள் வரவழைக்கப்பட்டு ஏலம் நடைபெறும் என சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதற்காக, பிப்.7 அன்று காலை முதல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு மீண்டும் வருகை தந்து விவசாயிகள் காத்திருந்த னர். பிற்பகல் வரை வியாபாரிகள் யாரும் வராததால் பருத்தி ஏலம் நடைபெறவில்லை. பருத்தி மூட்டைகள் கொண்டு வந்து இரண்டு நாட்களாக காத்திருந்த விவசாயிகள் இதனால் விரக்தியடைந்தனர். வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடம் என இரு ஏல மையங்களுக்கு இடையே நடைபெறும் பிரச்சனையால் இரண்டு நாட்கள் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டு பருத்தி மூட்டைகளுடன் குடோனில் காத்திருக்கும் சூழல் நிலவுவதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
சாதியமைப்பை கடவுள் உருவாக்கவில்லை என தெரிந்துவிட்டதே!
‘ராம்சத்மனாஸில்’ உள்ள கருத்துக்களை இப்போதாவது நீக்குங்கள்!
மோகன் பகவத்திற்கு சுவாமி பிரசாத் மவுரியா பதிலடி
புதுதில்லி, பிப். 7 - மும்பையில் ரவீந்தர் மந்திர் வளாகத்தில் நடைபெற்ற புனிதர் சிரோன்மணி ரோஹிதா ஸின் 647-ஆவது பிறந்த நாள் விழாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “இந்து மதத்தில் சாதிகள் கிடையாது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற வேறுபாடு கிடையாது. இவர்கள் மேல் சாதி, இவர்கள் கீழ் சாதி என்ற அடிப்படை யற்ற ஒரு பழக்கத்தை உருவாக்கியவர்கள் அர்ச்சகர்களே.. இறைவன் முன் அனைவரும் சமமே!” என்று குறிப்பிட்டிருந்தார். “அவரவர் மதங்களை கொண்டாடும் போது, அடுத்தவர்களின் மதங்களை இழிவு படுத்தாமல் செயல்பட வேண்டும். காசியில் இந்துக்களின் கோயில்கள் இடிக்கப்பட்ட போது, அவுரங்கசீப்பிற்கு, சத்ரபதி சிவாஜி எழுதிய கடிதத்தில், ‘இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இருவரும் கடவுளின் பிள்ளைகளே’ என குறிப்பிட்டிருந்தார்” என்றும் மோகன் பகவத் பேசியிருந்தார். இந்நிலையில்தான், சாதியை உரு வாக்கியது கடவுள் அல்ல என்பது தெரிந்து விட்ட நிலையில், இப்போதாவது, ராம்சரித் மனாஸில் உள்ள ஆட்சேபணைக்குரிய கருத்துக்களை அகற்ற முன்வாருங்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் திற்கு சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலா ளர் சுவாமி பிரசாத் மவுரியா பதிலடி கொடுத் துள்ளார். “ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ராம்சரித்மனாஸ்’ நூலில் தலித்து கள் மற்றும் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு உள்ளனர். அதை நீக்க வேண்டும். சாதி அமைப்பு பிராமணர்களால் உருவாக்கப் பட்டது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத் கூறி யுள்ளார். மதத்தின் ஒப்பந்தகாரர்கள் என்று அழைக்கப்படுபவர்களையும், பெண்கள், பழங் குடியினர், தலித்துக்கள் மற்றும் பிற்படுத்தப் பட்டவர்களை மதத்தின் போர்வையில் துஷ்பிரயோகம் செய்யும் மோசடிகளையும் தனது பேச்சில் அம்பலப்படுத்தியுள்ளார். எனவே, ‘ராம்சரித்மனாஸில்’ உள்ள ஆட்சே பனைக்குரிய கருத்துகளை அகற்ற இப்போதாவது முன்வரவேண்டும்’’ என்று மவுரியா குறிப்பிட்டுள்ளார்.