சென்னை,மே 19- ஆவின் பால் பொருட்கள் விநியோ கத்தை கண்காணிக்க, 27 மண்டல மேலாளர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. ஆவின் நிர்வாகம் பால் மட்டு மின்றி, 200க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. பால்கோவா, நறுமண பால், ஐஸ்கிரீம் உள்ளிட் டவை பல்வேறு மாவட்டங்களில் தயாரிக்கப்பட்டு, சென்னை அம்பத்தூரிலுள்ள ஆவின் உற்பத்தி பண்ணைக்கு வருகிறது. இங்கிருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு மாவட்டங்களில் உள்ள பால கங்களுக்கு அனுப்பி வைக்கப்படு கிறது. கோடை வெயில் காரணமாக, தயிர், லஸ்ஸி, மோர், ஐஸ்கிரீம், குல்பி, குச்சி ஐஸ், நறுமண பால் உள்ளிட்டவற்றின் தேவை அதிகரித் துள்ளது. பல பொருட்கள் ஆவினில் இருப்பு இல்லை. இது தெரியாமல், பாலகங்களுக்கு செல்லும் நுகர் வோர் ஏமாற்றத்துடன் செல்கின்ற னர். இது, ஆவின் உயர் அதிகாரி கள் கவனத்திற்கு சென்றுள்ளது. இதையடுத்து, ஆவின் விற்பனை பிரிவு பொது மேலாளர் ஆலின் சுனேஜா அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆவின் விற்பனை செயலியில், முந்தைய நாள் முன்பதிவு செய்யும் பாலகங்களுக்கு, குறித்த நேரத்தில் அனைத்து பொருட்களையும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இதை, 27 ஆவின் மண்டல அதி காரிகள் கண்காணிக்க வேண்டும். ஆவின் பால் பொருட்கள் இருப்பை யும், அவ்வப்போது உறுதி செய்ய வேண்டும். இந்த நடைமுறை முறை யாக பின்பற்றப்படுகிறதா என்பதை, விற்பனை பிரிவு துணை மேலாளர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.