திருப்பூர், பிப்.26- திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்தவர்கள், ஒரு வேனில் கொடுமுடி கோவிலுக்கு ஞாயிறன்று அதிகாலை சென்றுள்ளனர். அங்கிருந்து மீண்டும் காங்கேயம் அருகே ஓலப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது முத்தூர் செல்லும் வழியில் உள்ள வாலி பனங்காடு என்ற இடத்தில் அவர்கள் பயணித்த சரக்கு வேனும், எதிரே வந்த லாரியும் மோதிக் கொண்டன. இதில் சரக்கு வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது. சரக்கு வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கிட்டுசாமி (45), பூங்கொடி (48), தமிழரசி (17), சரோஜா (50) ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்தி லேயே உயிர் இழந்தனர். மேலும் சரக்கு வேனில் பயணித்த 30க்கும் மேற் பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட னர்.
இந்த விபத்து குறித்து வெள்ள கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் நிதியுதவி அறிவிப்பு இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காங்கேயம் அருகே பயணி களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததில் நா.சரோஜா (50), கோ.பூங்கொடி (48), நா.கிட்டுசாமி (45) மற்றும் கு.தமிழரசி (17) ஆகியோர் உயிரி ழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதனை உடனடியாக விபத்தில் பாதிக்கப் பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான உதவி களைச் செய்திட அனுப்பிவைத்துள்ளேன். மேலும், இவ்விபத்தில் படுகாய மடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ள கு.பழனி (50), சு.வளர்மதி (26), இந்துமதி (23) மற்றும் ச.காயத்ரி (12) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவா ரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.