கொல்கத்தா, பிப்.25- மேற்கு வங்கம் ஹவுரா மாவட்டத்தில் மாணவர் தலைவர் அனிஷ்கான் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதற்கு நீதி கேட்டு மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்பு கள் சார்பில் நாபகிராம், ஜலங்கி, நை ஹாட்டி, ராம்பூர்ஹட், ஜமுரியா, பாண்டு வா, சக்திபூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கொல்கத்தாவில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் ஸ்ரீஜிப் பட்டாச்சார்யா, பிரதிகுர் ரஹ்மான் மற்றும் திப்சிதா தர் உட்பட நூற்றுடக க்கணக்கானோர் கலந்து கொண்டனர். கொல்கத்தா காவல்துறை பேரணியை சீர்குலைக்கும் நடவடிக்கை களில் இறங்கியதை மாணவர் சங்கத்தினர் முறியடித்தனர்.