states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கிரீஸ் நாட்டு கடல் எல் லைக்கு அருகே பாகிஸ் தானைச் சேர்ந்த 209 பேர் பயணித்த படகு கவி ழ்ந்து கடலில் மூழ்கியது. படகில் பயணித்த 209 பேரும் உயிரிழந்ததாக பாகிஸ்தானின் பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி தகவல் தெரி வித்துள்ளது. இதே போல மொரோக்கோ நாட்டி லிருந்து இத்தாலி நோக்கி சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள் ளானதில் 30-க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்த தாக தகவல் வெளியாகி யுள்ளது.

ரூ.2,000 நோட்டை மாற்ற புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது அமேசான் நிறுவனம். தனது அமேசான் பே வேலட்டில் ரூ.50,000 வரையிலான ரூ.2000 நோட்டுகளை டெலிவரி பாய் உதவியுடன் மாற்றிக் கொள்ளலாம் என அமே சான் நிறுவனம் அறி வித்துள்ளது. 

நாட்டின் பிரபல இணைய வழி கல்வி நிறுவனமான பைஜூ’ஸ் (Byju’s) நிறுவனத்தின் உரிமை யாளர் ரவீந்திரனுடன் ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக 3 வாரிய உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

மதுரையைச் சேர்ந்த ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த், சென்னை -  பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 10 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கடத்தப் பட்டார். கடத்தப்பட்ட 10  மணி நேரத்தில் புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வாகன தணிக்கையின் போது தேவ் ஆனந்தை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.

சீனாவின் முக்கிய நகரான மின்சுவான் நகரில் உள்ள உணவகத்தில் நடை பெற்ற டிராகன் திருவிழா வில் எதிர்பாராவிதமாக கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.

பழனி முருகன் கோவி லில் பராமரிப்புப் பணிக் காக ரோப்காா் சேவை  வெள்ளியன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப் படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாட்டின் வடமாநிலங் களில் வெப்ப அலைக்கு நிகராக வெயில் கொளு த்தி வந்த நிலையில், அடு த்த 5 நாட்களில் வட மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியா பகுதி களில் அதிகபட்ச வெப்ப நிலையில் இருந்து 3-5 டிகிரி செல்சியஸ் குறை யும் என இந்திய வானி லை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

உலகச் செய்திகள்

பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான மேற்குக் கரைப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து சட்டவிரோதமாகக் குடியிருப்புகளை இஸ்ரேல் அமைத்து வருவதற்கு ஐரோப்பிய நாடான நார்வே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. 1967 ஆம் ஆண்டில் நடந்த போருக்குப் பின்னர் மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள பல பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கிறது. அங்கு சட்டவிரோதமாகக் குடியிருப்புப் பகுதிகளை உருவாக்கி, மக்களைக் குடியேற்றி வருகிறார்கள்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த எரிவாயு வெடிப்பில் 37 பேர் காயமடைந்தனர். இவர்களில் நான்கு பேர் படுமோசமான நிலையில் இருக்கிறார்கள். இரண்டு பேரைக் காணவில்லை. உயிரிழப்பு பற்றிய தகவல்கள் இல்லை. ஆனால் மேலும் கட்டிடத்தில் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணி நடக்கிறது. அந்த பணி நிறைவு பெற்ற பிறகுதான் உயிரிழப்பு மற்றும் தப்பிப் பிழைத்துவர்கள் பற்றிய முழு விபரங்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கள் நாட்டிற்கு எதிராக அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் 11ஆவது தடைகளை விதிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் கத்தாருடன் இணைந்து கூட்டுத் திட்டங்களை நிறைவேற்ற ரஷ்யா முனைப்புடன் உள்ளது. இந்தக் கூட்டுத்திட்டங்களின் மதிப்பு அமெரிக்க டாலரில் 190 கோடியாக உள்ளது. ரஷ்ய நிறுவனங்களில் கத்தார் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ரஷ்யாவின் பிரதமர் மிக்கைல் மிஷுஷ்டின் தெரிவித்திருக்கிறார்.