மதுரை, டிச.7- நவீன இந்தியாவில் நவீன செல்போன்கள், கணினிகள், தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் மேம்பட்டி ருந்தாலும் பாஜகவின் பழமை யான சிந்தனை மட்டும் மாற வில்லை; எந்தப் பிரச்சனையை யும் மதத்தின் அடிப்படையி லேயே அணுகுகின்றனர் என் றார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி. அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சம்மேளனத்தின் 10-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் செவ் வாய்க்கிழமை தொடங்கி நடை பெற்றுவருகிறது. இரண்டாம் நாள் மாநாட்டை வாழ்த்தி ஜன நாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ. வாசுகி மேலும் பேசியதாவது:- சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் குழந்தைகள்-அவர் களின் பெற்றோருடன் நேரடி யாக, நெருக்கமாக இணைந் துள்ளவர்கள் அங்கன்வாடி பணியாளர்கள். உங்களது போராட்டங்கள் தொடர்ந்தாலும் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் ஒன்றிய அரசின் கார்ப்பரேட் நலன் சார்ந்த, பணக்காரர்களுக்கு ஆத ரவான கொள்கைகள் தான்.
விலைவாசி தொடர்ந்து அதி கரிக்கிறது. ரேசனில் மண் ணெண்ணெய் வெட்டப்படு கிறது. கேஸ் விலை உயர்வோ கையை மீறிச் சென்றுவிட்டது. இதைப்பற்றி கவலைப்படாத மோடி அரசு, மக்கள் விறகுகள், சுள்ளிகளை வைத்து எரிக்கும் பழைய முறைக்கு திரும்பு வதையே விரும்புகிறது. வறுமையை ஒழிக்க, அங் கன்வாடி குழந்தைகள் எடை யுள்ளவர்களாக, வளர்ச்சி பெற்றவர்களாக மாற பஜனை கள் நடத்துங்கள்; பஜனைப் பாடல்களைப் பாடுங்கள் என்கி றார் பிரதமர் மோடி. ஏழை-எளிய மக்களுக்கு பயாஸ்கோப் பெட்டியை வைத்து படம் காட்டிக் கொண்டிருக்கிறார். ஏழை- எளிய மக்களின் வாழ்க்கை யில் வசந்தகாலம் வந்து விட்டது என்கிறார். உண்மையில் வந் தது சுனாமி போன்ற பேரழிவு கள் தான்.
விலைவாசி உயர்வும், வேலையில்லா திண்டாட்டமும், கால நிலைமாற்றமும் சாதி பார்த்து, மதம் பார்த்து வருவ தில்லை. அது அனைத்து மதத் தினரையும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. நாம் கேள்வியெ ழுப்பினால், அதற்கு கிறிஸ்தவர் களும், முஸ்லிம்களும் தான் காரணம் என்கிறது ஒன்றிய அரசு. வாய்ஜாலத்தாலும், வெற்றுப் பேச்சுக்களாலும் மக்களை ஏமாற்றுகிறது மோடி அரசு. எந்தப் பிரச்சனையையும் மதத்தின் அடிப்படையில், மனுஸ்மிருதியின் அடிப்படை யிலேயே அணுகுகின்றனர். சமீபத்தில் அப்தாப் என்பவர் ஷ்ரத்தா வாக்கர் ஒரு பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்தார். கொலை யுண்டது ஒரு பெண். கொலை செய்தவர் அமரா, அக்பரா, அந்தோணியா என்பது பிரச்ச னையல்ல. குற்றம் குற்றமே. குற்றவாளி தண்டிக்கப்பட வேணடும். ஆனால், பாஜக, கொலையுண்ட பெண்ணைப் பற்றிக் கவலைப்படாமல் கொலை செய்தவர் ஒரு இஸ்லா மியர் என பிரச்சாரம் செய்கிறது. இந்து, முஸ்லிம், கிறித்தவர் என பிளவுபடுத்துவதில் தான் கவனம் செலுத்துகிறது. பெண்கள் கண்ணியமான வாழ்க்கையைத் தொடரவும் கல்வி, வேலைவாய்ப்புகளில் சம உரிமை பெறவும் இந்தியா வின் மிகப்பெரிய பெண்கள் அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராடி வருகிறது. அங்கன் வாடி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டும்; சம உரிமை போராட்டத்தில் மாதர் சங்கத்து டன் கைகோர்க்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.