states

6 மாதமாக வெளிவராத குரூப் 2 முடிவுகள்

குரூப் 2 பணிகளுக்கான ஆள்  களை நியமிக்கும் செயல் முறை சுமார் 5 ஆண்டுகளாக தாமதமாகி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடந்த குரூப் 2  மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வு முடிவு களை விரைவில் வெளியிடுமாறு தமிழ்  நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வெழுதி யோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மொத்தமாக 58,081 விண்ணப்ப தாரர்கள் முதன்மைத் தேர்வுக்கு தேர்வு  செய்யப்பட்டனர், அவர்கள் 57,093 பேர்  தேர்வு எழுதினார்கள். நகராட்சி ஆணை யர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவு களில் உள்ள சிறப்பு கிளை உதவியா ளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்  காலியாக உள்ள 5,446 பணியிடங்களை  நிரப்ப குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட் டது. தேர்வு முடிவுகள் எப்போது வெளி யாகும் என்ற கேள்விக்கு, டிஎன்பி எஸ்சி அதிகாரிகள் கருத்து தெரிவிக்க  மறுத்த நிலையில், இந்த ஆண்டு டிசம்ப ரில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என  தெரிகிறது. கடைசியாக, கடந்த 2016  ஆம் ஆண்டுதான் குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தேர்வு முறை,  பாடத்திட்டம் மற்றும் கொரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு  காரணங்களால் 2019 ஆம் ஆண்டு நடைபெற இருந்த தேர்வு தாமதமானது என அரசு வேலைக்காக படித்து வரும்  இளைஞர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான், நடப்பாண்  டில் தேர்வுக்கான அறிவிப்பு வெளி யிடப்பட்டு தேர்வு பிப்ரவரி மாதம் நடை பெற்றது. குரூப் 2 தேர்வு எழுதிவிட்டு காத்திருக்கும் இளைஞர்கள் இது பற்றி  கூறுகையில், முதன்மைத் தேர்வுக் கான முடிவுகள் செப்டம்பரில் அறி விக்கப்பட வேண்டியது. ஆனால், டிஎன்பிஎஸ்சி திடீரென தேர்வு முடிவு கள் வெளியீட்டை டிசம்பருக்கு ஒத்தி வைத்துள்ளது. எந்த அளவுக்கு தேர்வு  முடிவுகள் வெளியீடு தாமதமாகிறதோ, அது எங்களது வாய்ப்பில் பாதிப்பு ஏற்  படுத்தும் என்கிறார்கள். கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி நடை பெற்ற முதன்மைத் தேர்வின்போது, தமிழ்த் தாள் தேர்வில், கேள்வித் தாளில் இருந்த வரிசை எண், தேர்வர் களின் எண்ணுடன் பொருந்தாமல் இருந்த தால், தேர்வு தாமதமாக நடைபெற்றது.  பல குளறுபடிகளுடன் நடந்து முடிந்த இந்தத் தேர்வின் முடிவுகளுக்காக தேர்  வெழுதிய 57,093 பேரும் காத்திருக்கி றார்கள்.