சென்னை, ஆக. 28-
அண்ணா பல்கலைக்கழ கத்தின் கீழ் இயங்கிவரும் 442 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணைய வழியில் கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது.
முதலில் மாற்றுத்திறனாளிகள் உள்பட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 775 இடங்கள் நிரம்பின. இதை யடுத்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 28-ல் தொடங்கி யது. முதல் 2 சுற்றுகள் முடிவில் 56,837 இடங்கள் நிரம்பியுள்ளன.
அதைத் தொடர்ந்து 3ஆவது சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 22இல் தொடங்கி 26ஆம் தேதி நிறைவு பெற்றது. இதில் பங்கேற்க 1,05,975 பேருக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. அவர்களில் 74,251 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். அதில் தரவரிசை, இடஒதுக்கீடு அடிப்படையில் 60,967 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டன.
அவற்றை ஏற்றுக் கொண்டு உறுதி செய்த 49,029 மாணவர் களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து சேர்க்கை கடிதம் பெற்றவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் கல்லூரியில் சென்று சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே 3 சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 1,06,641 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 50,737 பொறியியல் இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. இதையடுத்து காலியிடங் களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் 8ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ள தாக துறை அதிகாரிகள் தெரிவித்த னர்.