கண்ணூர், மே 24- கல்வித்துறையில் நாடு முழுவதும் கேரளா முன்னுதாரணமாக திகழ்கிறது என்றும் கல்வித் துறையில் புதிய மாதிரியை கேரளா படைத்து வருவ தாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். அரசுப் பள்ளிகளில் 3800 கோடி ரூபாய் முதலீடு செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாநில அளவில் கட்டி முடிக்கப்பட்ட 97 புதிய பாட சாலை கட்டிடங்களை திறந்து வைக்கும் விழா கண்ணூர் தர்மடம் ஜிஎச்எஸ்எஸ் முழபிலாங்காட்டில் நடந்தது. விழாவில் மேலும் முதல்வர் கூறுகையில், தற்போது கிப்பி நிதியின் மூலம் பள்ளி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதுவரை கிப்பி நிதியில் ரூ.5 கோடி செலவில் 126 பள்ளி கட்டிடங்களும், ரூ.3 கோடியில் 153 பள்ளி கட்டிடங்களும் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. இது தவிர 97 புதிய கட்டிடங்கள் கட்டப் பட்டு வருகின்றன. கிஃப்பியை விமர்சித்தவர்கள் கேரளாவின் இந்த முன்னேற்றத்தையும் பார்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். சிலர் கிப்பி என்பது மலர் பொடிக்காரனின் கனவு (பணக்காரன் ஆகும் கனவு) என்று கூறினார்கள். ‘கேரளாவில் மலர் பொடிக் காரரின் கனவும் நனவாகும்’ என முதல்வர் கூறினார். கல்வித் துறையின் சாதனைகளை எடுத்துரைத்த முதல்வர், கேரளாவின் குழந்தைகள் போதைக்கு அடி மையாவதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். விழாவுக்கு பொதுக் கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி தலைமை வகித்தார்.