states

img

தமிழ்நாடு ஆளுநரிடம் நிலுவையில் 20 சட்டமசோதாக்கள்: அமைச்சர் ரகுபதி தகவல்

சென்னை,நவ.10- தமிழக அரசு அனுப்பிய 20 சட்ட மசோதாக்கள் ஆளு நரிடம் நிலுவையில் உள்ள தாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “2022-23 கல்வியாண்டி ற்கான முதுநிலை சட்டப்  படிப்புகளுக்கான இணைய வழி ஒற்றை சாளர கலந்தாய் வுக்கு சட்டக்கல்வி இயக்கத் தின் வாயிலாக 1433 விண்ணப்பங்கள் வரப் பெற்றன. கடந்த நவ.5 ஆம் தேதி சட்டக் கல்வி இணையதளத்தில் தர வரிசைப் பட்டியல் வெளி யிடப்பட்டது. இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த வர்களுக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கடிதம் வழங்கப்பட்டது” என்றார். ஆன்லைன் ரம்மி அவசர  சட்டம் தொடர்பாக ஐஏஎஸ்  தலைமையில் ஆணையம்  எப்போது அமைக்கப்படும் என்ற கேள்விக்கு பதில ளித்த அவர், “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர் பான சட்ட மசோதா, ஆளு நரின் ஒப்புதலைப் பெற்று இன்னும் வரவில்லை. ஒப்புதல் கிடைத்ததும் அமைக்கப்படும் என்றும் ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தின்  ஷரத்துகள்தான் தற்போது  அனுப்பியுள்ள அவசர  சட்டத்திலும் இடம்பெற் றுள்ளன. புதிதாக எதுவும் இல்லை. ஒருவேளை விளக்கம் எதுவும் கேட்கப்பட்டால், விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறோம் என்றும் கூறினார். ஆளுநரிடம் 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதில் சில வற்றுக்கு விளக்கம் கேட்கப் பட்டுள்ளது. அதற்கு விளக்கம் அளித்துள்ளோம். ஆளுநரை கையெழுத்திடச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.