states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கோவை மாவட்டத்தில் உள்ள 1,206 கோழி பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்க உத்தர விடப்பட்டுள்ளது. திடீ ரென கோழி இறப்பு அதி களவில் இருந்தால் உட னடியாக கால்நடை பரா மரிப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு பண்ணை உரிமை யாளர்களுக்கு உத்தர விட்டுள்ளது. 

உலகின் பணக்கார நடிகர்களின் பெயர் பட்டி யலை ‘வேர்டு ஸ்டேட டிக்ஸ்’ நிறுவனம் வெளி யிட்டுள்ளது. இதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர்கள் ஜெர்ரி சீன்ஃபீல்ட் ஒரு பில்லியன் டாலருடன் முதலிடத்திலும், டைலர் பெர்ரி ஒரு பில்லியன் டாலர்களுடன் இரண்டா வது இடத்திலும், டுவைன் ஜான்சன் 800  மில்லியன் டாலர்களு டன் மூன்றாவது இடத்தி லும், இந்தி நடிகர் ஷாருக் கான் 770 மில்லியன் டாலர்களுடன் நான்கா வது இடத்திலும் உள்ள னர்.

சபரிமலை சன்னிதானத் தில் சாமி தரிசனத்திற்கு காத்திருந்த போது விருதுநகரைச் சேர்ந்த முருகன் (62), சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கன்னியப்பன் (74) ஆகிய 2 பக்தர்கள் மாரடைப்பால் உயிரி ழந்தனர். 

தமிழ்நாட்டில் 21 ஐபிஎஸ்  அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள் ளது. மேலும் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி உயர்வு அளிக்கப் பட்டுள்ளது. 

உலகச் செய்திகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு 14 பேர் பலியாகியுள்ளனர். அடுத்த இரண்டு நாட்களுக்கும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்பதால் வெள்ள நிலைமை மோசமடையவே செய்யும் என்று தேசிய வானிலை சேவை அலுவலகம் தெரிவித்துள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி நடைபெற்று வருகிறது.

கொலம்பியாவின் துணை ஜனாதிபதியான பிரான்சிஸ் மார்க்வெஸை கொலைசெய்ய  முயற்சி நடந்துள்ளது. தனது  வீட்டின் அருகே பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடிய வெடிகுண்டு கள் கிடைத்ததாகவும், பாதுகாப்புப் படையினர் அதை செயலிழக்கச் செய்து, அழித்து விட்டதாகவும் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது. இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்தி குஸ்தவோ பெட்ரோவுடன் இணைந்து மார்க்வெஸ் போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாளப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள புஷ்ப கமல் தஹல் என்ற பிரச்சந்தா தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மொத்த உறுப்பினர்கள் 275 என்ற நிலையில், நம்பிக்கை தீர்மானத்தின் மீது 270 பேர் மட்டுமே வாக்களித்தனர். எதிர்க்கட்சி யான நேபாள காங்கிரசும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால், தீர்மானத்திற்கு ஆதரவாக 268 வாக்குகள் கிடைத்தன.