ஸ்ரீநகர், ஜன.11- “ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடத்து மாறு கெஞ்சுவதற்கு, காஷ்மீரிகள் ஒன் றும் யாசகர்கள் அல்ல” என்று உமர் அப்துல்லா கூறியுள்ளார். தேர்தல் என் பது எங்களுடைய உரிமை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வ ரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலை வருமான உமர் அப்துல்லா, அனந்த நாக்கில் செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “ஜம்மு - காஷ்மீரில் இந்த ஆண்டும் தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்ப வில்லை என்றால், அது அப்படியே தொடரட்டும். நாங்கள் யாரிடமும் கெஞ்சுபவர்கள் அல்ல. தேர்தல் என்பது எங்கள் உரிமை. காஷ்மீர் மக்கள் தேர்த லுக்காக யாரிடமும் மன்றாட மாட்டார் கள். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. இதனை நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். சொத்துக்கள் மற்றும் அரசு நிலங்க ளில் இருந்து மக்கள் வெளியேற்றப்படு வதும் ஜம்மு - காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படாததற்கு ஒரு காரணம். அத னால்தான் ஒன்றிய அரசு இங்கு தேர் தலை நடத்தவில்லை. அவர்கள் மக்க ளைத் தொல்லை செய்ய விரும்பு கிறார்கள். மனிதர்களின் காயங்களுக்கு தைலம் பூசுவதற்கு பதிலாக, காயத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக் கமே அவர்களுக்கு உள்ளது. தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசாங்கம் மக்களின் காயங்களைக் குணப்படுத்த முயற் சிக்கும் என்பது பாஜக அரசுக்கு தெரி யும். அதனால்தான் அவர்கள் உப்பு மற் றும் மிளகாயைத் தடவுகிறார்கள்.
2019-ஆம் ஆண்டில், ஜம்மு - காஷ்மீ ருக்கான 370-ஆவது பிரிவை ரத்து செய்து விட்டு, அங்கு நிலைமையை தலைகீழாக மாற்றி விட்டதாக ஒன்றிய அரசு கூறியது. ஆனால், உண்மையில் முன்பு இருந்ததைவிட இப்போது அதிக ளவில் துணை ராணுவத்தை இங்கு குவித்துள்ளது. ரஜோரி தாக்குதலை தொடர்ந்து கிராமப் பாதுகாப்பு காவ லர்களுக்கு ஆயுதம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவு, நிலைமை அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே காட்டுகிறது.” இவ்வாறு உமர் அப்துல்லா பேசியுள்ளார். ஜம்மு - காஷ்மீரில் கடைசியாக 2014- ஆம் ஆண்டு இறுதியில் சட்டப்பேர வைத் தேர்தல் நடைபெற்றது. அப் போது, மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (பிடிபி) இணைந்து கூட்டணி அரசை அமைத்த பாஜக, 2018-ஆம் ஆண்டில் திடீரென மெகபூபா முப்திக்கு அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென விலக்கிக் கொண்டதுடன், 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு - காஷ்மீ ருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய் தது. மேலும், மாநில அந்தஸ்தையும் பறித்து, ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித் தது. அதன்பிறகு, முஸ்லிம்கள் பெரும் பான்மையை இழக்கும் வகையில், தொகுதி எல்லைகளை மாற்றியமைத்த ஒன்றிய அரசு, அதன்பிறகும் கூட இன் னும் தேர்தல் நடத்தாமல் உள்ளது குறிப் பிடத்தக்கது.