states

கோட்சேவின் இந்தியாவை ஒருபோதும் மக்கள் ஏற்கமாட்டார்கள்...

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி பேச்சு

ஸ்ரீநகர், ஜன. 10 - அடக்குமுறை, சர்வாதிகாரம் மூலமாக பாஜக தங்களை நிரந்தரமாக நிலைநிறுத்திக் கொள்ளலாம் என கணக்குப் போடுகிறது. ஆனால், அது நடக்காது கோட்சே-வின் இந்தி யாவை மக்கள் ஏற்கமாட்டார்கள். பாஜக-வின் அதிகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி  தலைவருமான மெகபூபா முப்தி,  ஸ்ரீநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இதுதொடர்பாக மேலும் பேசியிருப்பதாவது: இந்திய மக்களின் தயவால் ஒன்றிய ஆட்சியதிகாரத்தைப் பிடித்த பாஜக, இன்று அதே மக்களை தங்கள் காலில் போட்டு நசுக்கி வருகிறது. ஒன்றிய அரசு என்ன செய்தாலும் மக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். அதையும் மீறி, ஒன்றிய அரசையோ, பாஜக-வையோ யாராவது விமர்சித்தால் உடனடியாக அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்து விடுகிறது. சிபிஐ, அம லாக்கத்துறை போன்ற அமைப்புகள் அவர்கள் மீது ஏவி விடப்படுகின்றன. அடக்குமுறையை பாஜக தனது ஆயுத மாக கையாண்டு வருகிறது.  இவ்வாறு அடக்குமுறையின் மூல மாகவும், சர்வாதிகாரத்தின் வாயிலாக வும் தங்களை நிரந்தரமாக நிலை நிறுத்திக் கொள்ளலாம் என பாஜக- வினர் நினைக்கின்றனர். அவர்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன். ஒரு போதும் சர்வாதிகாரத்திற்கு நிரந்தர வெற்றி கிடைத்ததில்லை. இதற்கு பல  உலக வரலாறுகள் சாட்சியாக இருக் கின்றன.

அமெரிக்க அரசுக்கு பயந்து  அந்நாட்டு மக்கள் அமைதி காத்திருந் தால், வியட்நாமில் இருந்து அமெரிக்கா வெளியேறி இருக்காது. அதேபோல, வங்க மக்கள் பாகிஸ்தா னின் அடக்குமுறைக்கு அஞ்சியிருந் தால், இன்று வங்கதேசம் என்ற நாடே  உருவாகி இருக்காது. எனவே, சர்வாதி காரத்தால் மக்களை வெகுநாட் களுக்கு அடக்கி வைக்க முடியாது. அந்த  வகையில், பாஜக-வின் சர்வாதிகார மும் விரைவில் முடிவுக்கு வரும்.  ஒன்றிய பாஜக அரசு தங்களுக்கு ஏற்றவாறு இந்திய அரசியல் சாச னத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி  வருகிறது. காஷ்மீர் அரசியல் சாச னத்தை முற்றிலுமாக அழித்தது போல,  இந்திய அரசியல் சாசனத்தையும் குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இன்னும் சிறிது விட்டால் கூட, நம் முன்னோர் கள் ரத்தம் சிந்தி ஏற்றிய நம் தேசியக் கொடியை தூக்கியெறிந்துவிட்டு, அவர்களின் கட்சிக் கொடியான காவிக்கொடியை பறக்கவிட்டு விடும். ஒருகாலத்தில், நமது தேசத்தில் நீதித்துறை சுதந்திரமாகவும், அதிகார மிக்கதாகவும் இருந்தது. பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் அளவுக்கு நமது நீதித்துறை விளங்கியது. ஆனால், இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது? பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் சிக்கு பவர்களுக்கு ஜாமீன் கொடுக்க கூட நீதிமன்றங்கள் பயப்படுகின்றன. இதை நான் சொல்லவில்லை. நமது உச்ச  நீதிமன்றத் தலைமை நீதிபதி சொல்கிறார். நீதித்துறைக்குத்தான் இந்த கதி என்று பார்த்தால், உண்மை யை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய ஊடகங்களும் பாஜக-வின் கைக்குள் சென்றுவிட்டன. ஆனால், இந்த அடக்குமுறை நீண்டகாலம் நீடிக்காது. இந்தியர்கள் ஒருபோதும் கோட்சேவின் இந்தியாவை ஏற்க மாட்டோம். இவ்வாறு மெகபூபா முப்தி பேசியுள்ளார்.