கொச்சி, மார்ச் 18- வேந்தர் பதவியை தவறாக பயன்படுத்திய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு, உயர்நீதி மன்றத்தில் மூன்றாவது முறையாக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கேரள தொழில்நுட்ப பல்கலைக் கழ கத்தில் (கேடியு) சிண்டிகேட் மற்றும் ஆளுநர் குழு எடுத்த முடிவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது சமீ பத்திய நிகழ்வு. விதிகளை மீறி கேடியுவின் தற்காலிக துணை வேந்தராக சிசா தாமஸை நியமித்த ஆளுநரின் நட வடிக்கை மற்றும் கேரள பல் கலைக்கழக தேடல் குழு விவகாரம் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இடைக்கால உத்தரவில், துணை வேந்தர் நியம னத்திற்கான தேடல் குழுவில் வேந்தரின் பிரதிநிதி தேவை யில்லை என்று நீதிமன்ற அமர்வு தெளிவுபடுத்தியது. கேடியு துணை வேந்தர் விவகாரத்தில் புதிய துணை வேந்தர் நியமனம் தொடர்பான நட வடிக்கைகளை அரசு தொடரலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கேரளப் பல்கலைக்கழகத்தில் செனட் பிரதிநிதியை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நியமிக்கா விட்டால், வேந்தர் நடவடிக்கை எடுக்கலாம் என்ற தனி நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்ததும் ஆளுநருக்கு பின்ன டைவாக அமைந்தது.