states

img

கேரளத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்கா

திருவனந்தபுரம், ஜுலை 31-   கேரளாவின் பெருமைமிக்க திட்டமான ‘டிஜிட்டல் அறிவியல் பூங்கா’ முதல் கட்டம் ஆகஸ்ட் 1,  செவ்வாயன்று துவங்குகிறது. டெக்னோபார்க் கட்டம்-4 டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை ஒட்டி பூங்கா அமைக்கப்படும். முதல் கட்ட பணிகளை முதல்வர் பினராயி விஜயன் மதியம் 12 மணிக்கு நிறுவன கட்டிடத்தில் தொடங்கி வைக்கிறார். பூங்காவுக்காக 13.95 ஏக்கர் நிலத்தை டிஜிட்டல் பல்கலைக்கழ கத்துக்கு மாற்ற நிர்வாக அனு மதி வழங்கப்பட்டது. கட்டுமான பணிகளுக்கு ரூ.1515 கோடி  செலவாகும் என எதிர்பார்க்கப்படு கிறது. இத்திட்டத்திற்கு கிப்பி மூலம் ரூ.200 கோடி நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. பூங்காவில் முதலில் 1,50,000 சதுர அடி பரப்பளவில் இரண்டு கட்டிடங்கள் கட்டப்படும். ஐந்து மாடிகளில், 1 லட்சம் சதுர அடி கொண்ட  முதல்  கட்டிடத்தில் சிறப்பு மையங்கள் மற்றும் டிஜிட்டல் இன்குபேட்டர் இருக்கும். 50,000 சதுர அடி கொண்ட  கட்டிடத்தில் நிர்வாக அலகுகள் மற்றும் மூன்று தளங்களில் டிஜிட்டல் அனுபவ மையம் இருக்கும். முதல் கட்டிடத்தில் பொதுவான தொழில்துறை உள்கட்டமைப்பு, கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பு, பொதுவான பணியிடங்கள் மற்றும் பல்வேறு வணிக அலகுகள், ஸ்டார்ட் அப்புகள் மற்றும் தொழில்களுக்கான தனிப்பட்ட வேலை அலகுகள் இருக்கும். சிறப்பு மையங்களின் கீழ் முக்கிய ஆராய்ச்சி கூடங்களும் இங்கு நிறுவப்படும். டிஜிட்டல் உலகில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தும் வணிகப் பிரிவுகளுக்கு ஆதரவை வழங்குவதையும், தொழில்துறை 4.0 டெக்னாலஜிஸ், எலக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜிஸ் மற்றும் ஸ்மார்ட் ஹார்டுவேர், மற்றும் நிலையான மற்றும் ஸ்மார்ட் மெட்டீரியல்ஸ் ஆகிய மூன்று துறைகளில் தொழில்கள், வணிக அலகுகள் மற்றும் ஸ்டார்ட்-அப் களுக்கு வசதிகளை வழங்கு வதையும் இந்தத் திட்டம் நோக்க மாகக் கொண்டுள்ளது. துவக்க விழாவிற்கு அமைச்சர் ஜி.ஆர்.அனில் தலைமை தாங்குகிறார்.