சபரிமலை, டிச.27- சபரிமலையில் 41 நாட்கள் நடை பெற்ற மண்டல காலத்தின் நிறைவாக, செவ்வாயன்று மதியம் கண்டரரு ராஜீவர் தலைமையில் மண்டல பூஜை நடைபெற்றது. முன்னதாக சன்னிதானத் திற்கு திங்களன்று (டிச.26) கொண்டு வரப்பட்ட தங்க அங்கி ஊர்வலத்து க்கு ஆரவாரத்துடன் வரவேற்பு அளிக்க ப்பட்டது. பகல் 2 மணிக்கு பம்பையில் தேவஸ்வம் நிர்வாக அலுவலர் அய்யப்பன் தலைமையில் கணபதி கோயிலுக்கு ஊர்வலமாக தங்க அங்கி எடுத்து வரப்பட்டது. இங்கு மதியம் 3.30 மணி வரை பக்தர்கள் தங்க அங்கி தரிசனம் செய்தனர். பம்பையில் இருந்து புறப்பட்டு நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம் கடந்து சரக்குத்தியை 5.30க்கு சென்ற டைந்தது. இங்கிருந்து சபரிமலை தேவசம் செயல் அலுவலர் எச்.கிருஷ்ணகுமார், நிர்வாக அதிகாரி பி. எஸ்.சாந்தகுமார், கேரள தேவஸ்வம் (அறநிலையத்துறை) அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன், தமிழக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, தேவசம் தலைவர் கே.ஆனந்த கோபன், கே.யு.ஜெனிஷ்குமார் எம்.எல்.ஏ., தேவசம் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வரவேற்று சோபானம் அழைத்துச் சென்றனர். சோபானத் தந்திரி கண்டரரு ராஜீவர், தங்க அங்கியை பெற்று ஐயப்பன் சிலைக்கு பூஜை செய்தார். 27ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு தென்படும்.
சபரிமலை வருவாய் ரூ.222.98 கோடி
சபரிமலை மண்டல பூஜை காலத்தில் திங்கள் (டிச.26) வரை மொத்த வருவாய் ரூ.222,98,70,250 கிடைத்துள்ளது. இதில் ரூ.70.10 கோடி காணிக்கையாக கிடைத்தது. இது மண்டல காலம் தொடங்கி 39 நாட் களின் கிடைத்துள்ள வருவாய் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலை வர் கே.அனந்தகோபன் தெரிவித்துள் ளார். திங்களன்று (டிச.26) அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகை யில், இந்த கால அளவில் 29,08,500 பக்தர்கள் வந்தனர். 20 சதவிகிதம் பேர் குழந்தைகள். இரண்டு ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் இருந்ததே தற்போது குழந்தைகளின் எண்ணிக்கை அதி கரிக்க காரணம். குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் களுக்கான சிறப்புப் பாதை பயனுள்ள தாக அமைந்தது. முடிந்தவரை சிறிய புகார்களுடன் மண்டல காலத்தை நிறைவு செய்ய முடிந்தது. சபரிமலை யில் பொதுவாக கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் வழக்கத்தை விட அதிக நேரம் தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது பரிசீலிக்கப்படும் என தலைவர் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில், நிர்வாகக் குழு உறுப்பினர் அட். எஸ்.எஸ்.ஜீவன், செயல் அலுவலர் எச்.கிருஷ்ணகுமார், வாரிய தலைமை பொறியாளர் ஆர்.அஜித்குமார், விஜிலென்ஸ் எஸ்.பி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.