states

img

கேரளத்தில் தொழிலாளர் சட்டங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் தனியார் நிறுவனங்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு

திருவனந்தபுரம் கேரளத்தில் உள்ள ஐடி பூங்காக்களில் செயல் படும் நிறுவனங்களு டன் கையெழுத்திட்ட ஒப்பந் தங்களில், மாநிலத்தில் நடைமுறை யில் உள்ள அனைத்து தொழிலா ளர் சட்டங்களையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்றால், தற்போதுள்ள சட்ட விதிகளின்படி ஊழியர்களும் நடவடிக்கை எடுக்க லாம் என முதல்வர் பினராயி விஜ யன் சட்டமன்றத்தில் கூறினார்.

எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் அன்னா செபாஸ்டியன் புனேயில் பணிச்சுமையால் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து பி.பி.சித்தரஞ்சன் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு முதல்வர் அளித்த பதிலில்,“இந்த கவன ஈர்ப்பு நோட்டீசில் கூறப்பட்டுள்ள விவரங் கள் ஒன்றிய அரசின் கவனத்தி ற்கு கொண்டு செல்லப்படும். ஐடி உட்பட சில துறைகளில் ஓய்வற்ற  வேலை, பணிநீக்க அச்சுறுத்தல்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு கள் உள்ளன.

எர்ணாகுளம் கங்கரப்படியைச் சேர்ந்தவர் 26 வயதான அன்னா செபாஸ்டியன் எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் புனே அலு வலகத்தில் பணிபுரியும் போது, ஜூலை 21ஆம் தேதி தனது குடி யிருப்பில் மயங்கி விழுந்து இறந்தார். முன்னதாக நிறுவனத் தின் தலைவருக்கு அனுப்பிய கடி தத்தில், பணியிடத்தில் எந்த சலுகை யும் பெறவில்லை என்றும், அதிகப் படியான பணிச்சுமை மற்றும் அழுத்தத்தை அனுபவித்து வருவ தாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நட த்தப்படும் என அந்நிறுவன அதி காரிகள் உறுதியளித்துள்ளதாக தெரிகிறது. அன்னா செபாஸ்டியன் மரணத்தில் சந்தேகம் எதுவும் எழாததால் வழக்குப் பதிவு செய் யப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

கொரோனாவுக்குப் பிறகு, பல நிறுவனங்கள் “வொர்க் ஃப்ரம் ஹோம்” (வீட்டில் இருந்தே வேலை) முறையை அறிமுகப் படுத்தியுள்ளன. ஆனால் தற்போ துள்ள தொழிலாளர் சட்டங்களில் இதற்கான தெளிவான காலவரை யறை எதுவும் இல்லை” என அவர் கூறினார்.